இடுகைகள்

மேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?

படம்
                சிங்காரச்சென்னை வேண்டுமா ? சந்தோஷச் சென்னை வேண்டுமா ? சென்னை மாநகரம் தனது 382 ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது . இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது . நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி , மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது . அதில்தான் இன்று கலை , கலாசாரம் , வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது . நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் . பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம் . இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம் . முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி . என் . அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார் . கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார் . 1949 ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது . சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது . இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு

இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!

படம்
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார். ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர். இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நன்றி: இகோ வாட்ச்