இடுகைகள்

பார்ப்பனன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

படம்
  பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார்  மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்...

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!

  மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு. மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள்,  சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை...

மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்!

படம்
  மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்! உலகளவில் உள்ள ஊடகங்கள், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. அவற்றில் கவனம் செலுத்தி செய்தியும் வெளியிடுவதில்லை. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஊடகங்கள் அன்பு நிறைந்த இந்திய நாட்டில் தீண்டத்தகாதவர்களின் நிலையைப் பற்றி பெரிதாக அறியாமலயே இருக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் எதற்காக இதைப்பற்றி பேச வேண்டும், உள்ளே இருப்பவர்கள் கூட தீண்டத்தகாத மக்களைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள் நகரத்தில் உள்ளவர்கள், தீண்டாமை எங்கே இருக்கிறது. அதெல்லாம் ஒழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெளிநாட்டினர், ஆங்கிலம் பேசும் இந்தியர்களைப் பார்த்து தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பினால், அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் மேற்சொன்னதுதான். அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்பார்கள். ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர், சென்னைக்கு வந்து பத்து நாட்களாக தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தீண்டத்தகாதவர் ...

தீண்டத்தகாதவர்கள் பிறப்பும், வாழ்வும், இறப்பும் என்றும் மாறாதவை!

படம்
  நடைமுறையில் அகிம்சை இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார். இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார். வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்...

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

சேரியோ, அக்கிரஹாரமோ மனதில் ஈரம் இருப்பது முக்கியம்! ஆண்டான் அடிமை - இயக்கம் மணிவண்ணன்

படம்
    ஆண்டான் அடிமை சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உண்ணி இயக்கம் மணிவண்ணன் அக்ரஹாரத்தில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரில் வளர்க்கப்படும் ஒருவர் தனது பெற்றோரைத் தேட முயல்கிறார். இதன் விளைவாக அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை. இயக்குநர் மணிவண்ணன் இடதுசாரி கருத்தியல் கொண்டவர். ஆண்டான் அடிமை வணிகப்படம் என்றாலும் படத்தில் பேசி இருக்கிற அரசியல் நிறையப்பேருக்கு பிடித்தமானது அல்ல. அவரின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ், படத்தின் கருத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் குத்துப்பாட்டு, ஆபாசம் எல்லாம் கிடையாது. எடுத்துக்கொண்ட மையப்பொருளை தீவிரமாக பேசியிருக்கிறார்கள். புத்தியிருப்பவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் நிறைய யோசிக்க வைக்கும். சத்யராஜ் படத்தில் இரு வேடங்கள் செய்கிறார். ஒன்று சேரியில் அடிமாடுகளை லாரியில் கொண்டு வந்து சேர்க்கும் லாரி டிரைவர் சிவராமன். இன்னொன்று, சுப்பிரமணிய ஐயரின் மகன், சங்கரன். இரு பாத்திரங்களுமே பல்வேறு உளவியல் சிக்கல்களை, சங்கடங்களை அந்தந்த சாதி அளவில் சந்திக்கிறது. சேரியில் வாழும்போது சத்யராஜ்...