இடுகைகள்

விவசாயி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலமாரியில் கால்நடை தீவனப்பயிர்களை வளர்க்கும் விவசாயி - நாமக்கல் சரவணன்

படம்
  அலமாரியில் சோளம் விதைத்து அதை கால்நடைகளுக்கு போடுவதை எங்கேனும கண்டிருக்கிறீர்களா? அதை நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் செய்கிறார். வெளிநாடுகளில் மண் இல்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிப்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். அதை நமது ஊரில் சாத்தியப்ப்படுத்துகிறார். தனது உறவினர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு சொல்லித் தருகிறார். அரியக்கவுண்டம்பட்டியில் விவசாயத்திற்கென சிறியளவு நிலம் இருக்கிறது. ஆனால் அவர் வளர்க்கும் கால்நடைகளுக்கான தீனி என்று வரும்போது அது போதுமானதாக இல்லை., எனவேதான் மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் வழியை கிரிஷி விக்யான் கேந்திரா எனும் மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பில் அறிந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார். இதில் மண் இல்லாத காரணத்தால் நீர் மூலமே அனைத்து சத்துகளையும் பயிருக்கு தரவேண்டியிருக்கும். குறைவான அளவில் கால்நடை தீவனங்களை, பருப்புகளை விளைவிக்க முடியும். சந்தையில் கிடைக்கும் தீவனங்களை விட மலிவாக விளைவிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான சங்கதி. 500 கிலோ விதையில் 4.5 கிலோ கால்நடை தீவனத்தைப் பெறமுடிகிறது. விதை சோளத்திற்கு இருபத்து நான்கு மணிநேரமும் நீர் வி

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில்

ஒப்பந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் லாபம்!

படம்
  விவசாயத்தோடு கைகோக்கும் தொழில்நுட்பம்! 2013ஆம் ஆண்டு ஹரியாணாவின் குர்கானில் பார்த்து வந்த தகவல் தொழில்நுட்ப பணியை விட்டு விலகினார் சச்சின் காலே. அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டனர்.  அப்போது சச்சினுக்கு, அவரின் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. நீ ஏன் பிறருக்காக உழைக்கவேண்டும். உனக்காக உழைக்கலாமே என்ற வாசகத்தை நினைவில் கொண்டு, ”விவசாயம் செய்யப்போகிறேன்” என்றார்.   விரைவிலேயே தனது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்பினார். சச்சினின் குடும்பத்திற்கு சொந்தமாக  24 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் செய்த முதல் ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட தவறுகளை விரைவில் சரிசெய்துகொண்டார். பருவகாலங்களில் நெற்பயிர்,  பிற காலங்களில் காய்கறிகளையும் பயிரிட்டு வென்றார். தனது விவசாய முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு கூற  2014ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.  சச்சின் காலே, ஒப்பந்த முறை விவசாயத்தை பற்றி ஆய்வு செய்து, அதைப்பற்றி விவசாயிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். சச்சினின் செயல்பாட்டால், தற்போது விவசாயிகளின் நிலங்களில் ஆண்டு முழுவதும

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம் ஆண்டுகளில் அலங்காரச் செடிகளில் தி

மரபான நெற்பயிர் ரகங்களை சேகரிக்கும் விவசாயி!

படம்
  கரிமங்கலம் தாலூக்காவைச் சேர்ந்த ஜே பாளையத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.  தனது நிலத்தில், நாட்டுரக பயிர்களை பயிர்செய்து வருகிறார். சிறுவயதில் தனது தாத்தா பயிரிட்ட கத்தரி செடிகளை பார்வையிட்ட நினைவு அவருக்கு இப்போதும் இருக்கிறது.  விவசாயத்தை பட்டப்படிப்பில் எடுத்து படித்தவருக்கு, வேலை எளிதாக கிடைக்கவில்லை. சரி இருக்கும் நிலத்தில் பயிர்களை பயிரிடலாம் என்று நினைத்து உழைத்த உழைப்பும் கைகொடுக்கவில்லை. எனவே, நாட்டு ரக பயிர்களைத் தேடி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு சென்றார்.  நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்பவர்களிடம் பேசினேன். அதில் நாட்டு ரக பயிர்கள் பலவும் அழிந்துவிட்டதை அறிந்தேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த நிலையை மாற்ற விரும்பினேன். நினைத்ததோடு அல்லாமல் அதற்காக உழைக்க விரும்பினார். அப்படித்தான் ஐந்து ஆண்டுகளில் 26 நாட்டு ரகங்களை சேகரித்தார்.  பழங்குடிகள் வாழும் ஊர்களான மோதுர், வத்தல்மலை, சித்தேரி, பெத்தமுகிலாலம் சென்று நாட்டு நெற்பயிர் ரகங்களை சேகரித்திருக்கிறார். இவை அதிக பராமரிப்பு கோராதவை. எளிதாக பூச்சிகளையும், நோய்களையும் சமாளிக்க முடியும் திறன் கொண்

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை

பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

படம்
  ”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்” உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது.  உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.   பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக வில

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்

குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம், கொலை செஞ்சிருக்க கூடாது! - முப்பிடாதி

படம்
எனக்கு முதன்முதலில் கிணத்துல இருந்து எடுத்த பிணம் பத்தி ஞாபகம் இல்லை. ஆனால் மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. திருமணமாகாத பொண்ணு தனக்கு பொறந்த குழந்தை கிணத்துக்குள்ள வீசிட்டு போயிருச்சி. அந்த குழந்தை பொறந்து ஒரு நாள்தான் ஆயிருக்கும். கிணத்தில் நாற்பது அடிக்கு கீழே இருந்து. அதை கையில் எடுத்துட்டு வந்தேன். துணியில வெச்சு வெளியே கொண்டு வந்தாங்க. அந்த குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம். கிணத்தில் வீசிக் கொன்னது சங்கடமாக இருந்தது என்றார் முப்பிடாதி. தென்காசி வட்டாரத்தில் யாராவது நீர்நிலையில் இறந்துபோனால் கூப்பிடு முப்பிடாதியை என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவு பிரபலம். பிணங்களை மூச்சு தம் கட்டி கீழேயிருந்தே மேலே கொண்டு வந்து விடுகிறார். இப்போது 83 வயதாகும் மனிதர். பிணங்களை மீட்பதை 20 வயதிலிருந்து செய்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண், ஒரு பெண். இவர்கள் யாருக்குமே அப்பா பிணத்தை தூக்குவது பிடிக்கவில்லை. ஆனால் முப்பிடாதி காவல்துறையினர் கூப்பிட்டால் உடனே அந்த குரலுக்கு செவிசாய்த்து தனது பணியை செய்து தருகிறார். போலீசாரும் இவருக்கு இப்போதுதான் முதியோர் பெ

பெண்களின் உரிமைகள், விவசாயிகளுக்காக பாடுபட்ட குடியரசுத்தலைவர்! - பிரதீபா பாட்டீல்

படம்
  பிரதீபா பாட்டீல் பிரதீபா பாட்டீல் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை குடியரசுத்தலைவராக பணியாற்றியவர் பிரதீபா.  1934ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஜால்காவோன் என்ற இடத்தில் டிசம்பர் 19 அன்று பிறந்தவர். நாராயண் ராவ் பாட்டீல், கங்காபாய் பாட்டீல் ஆகியோர்தான் இவரின் பெற்றோர். பிரதீபா தனது பனிரெண்டு வயதில் அம்மாவை இழந்தார். பாசகேப் என்ற அத்தை கண்டிப்பும் கறாருமாக பிரதீபை வளர்த்தார்.  அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர் பிரதீபா. பாம்பே சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.  தனது 27 வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினரானார். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் எட்லாபாத்  தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.  பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்தார். பிரதீபா, டாக்டர் தேவிசிங் ஷெகாவத் என்பவரை மணந்தார். இவர் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர்.  2004ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 12    ஆவது குடியரசுத்தலைவராக பதவியேற்றார். நேரு, சோனியா ஆகியோரின் வழிவந்தவர்களுக்கு மரியாதை வழங்கி பக்குவதாக

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ

விவசாயம் நரகம் எனும் அப்பாவுக்கும், விவசாயம்தான் என் எதிர்காலம் என முடிவெடுக்கும் மகனுக்குமான போராட்டம்! - ஶ்ரீகாரம்

படம்
          Director: Kishor B Produced by: Ram Achanta, Gopichand Achanta Writer(s): Kishor B, Sai Madhav Burra (dialogues)         ஶ்ரீகாரம் விவசாயம் செய்யவேண்டாம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று கூறும் அப்பாவுக்கும் . விவசாயம்தான் என் எதிர்காலம் என்று சொல்லும் ஐடி பையன் என இருவருக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை . மேலே சொன்னதுதான் படத்தின் முக்கியமான கதை . இதைச்சுற்றி , ஐ . டி துறை வேலை , அதிலுள்ள பிரச்னைகள் , படத்தின் நாயகனை கல்லூரி தொடங்கி வேலை செய்யும் கம்பெனி வரை துரத்தி காதல் செய்யும் சைத்ரா , கிராமத்தில் விவசாயத்தில் நஷ்டமாகி நகரத்திற்கு வந்து கூலிக்கு பிழைக்கும் மனிதர்கள் , வட்டிக்கு பணம் கொடுத்து அதற்கு அடமான நிலங்களை வாங்கி கொண்டு பணக்கார நிலக்கிழாராக மாறி ஊர் மொத்தமும் தன்னைப் புகழவே்ண்டும் , ஊரின் பெயரை ஏகாம்பர புரம் என மாற்றி வைக்கவேண்டும் என பேராசையுடன் வாழ்பவர் என கிளைக்கதைகள் உள்ளன . படத்தின் கதையைச் சொல்லும்போதே விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி நிறைய வீடியோக்களை சர்வானந்த் பார்த்திருப்பார் போல . படம் முழுக்க பொங்கல் தின்று காபி குடித்து வயிற்று பொருமல்

விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கச்சலுகைகளை பரந்த அளவில் பார்க்கவேண்டும்! - என்.கே.சிங், நிதி கமிஷன்

படம்
                நிதி கமிஷன் தலைவர் என் . கே . சிங் உங்களது அறிக்கை வெளிவந்துள்ளது . மாநிலங்களிடமிருந்து என்ன புரிந்துகொண்டிருக்கிறீர்கள் ? இது டெஸ்ட் மேட்ச் போல . ஒருநாள் போட்டியைப் போல உடனடியாக எந்த பதிலும் கிடைத்துவிடாது . நாங்கள் கொடுத்துள்ள அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கானது . நாங்கள் மாநில , மத்திய அரசுளின் கருத்துக்களை எதிர்பார்த்து காத் திருக்க வேண்டியுள்ளது . சில மாநில முதல்வர்கள் எனக்கு போன் செய்து தங்களது கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்லியுள்ளார்கள் . நாங்கள் தேவை , திறன் ஆகிய அம்சங்களை முன்வைத்து சிறப்பாக செயல்பட முயன்று வருகிறோம் . இதில் மக்கள்தொகை , தனிநபர் வருமானம் , பணக்கொள்கை ஆகியவை முக்கியமானவை . அரசிடமும் , மக்களிடமும் நம்பிக்கை பெற்றால்தான் நிதி கமிஷன் இன்னும் நீடித்து செயல்பட்டுவருகிறது . அரசு மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் ? மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் தேசிய அளவிலான பார்வையில் பார்க்கும் . அதற்கான நிதி ஒதுக்குதலையும் அப்படியே பார்க்கும் . மாநில அரசுகள் திட்டங்களில் தங்களுடைய ப

சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

படம்
                  சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி ! கடந்த ஆண்டு மார்ச் 24 இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது . அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம் , வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே . இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார் . ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர் . அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர் . கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது . பல்வேறு சிறு , குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது . நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது . இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா , முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை , பருப்பு , மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர் . கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து

நாங்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்! - நரேந்திரசிங் தோமர்

படம்
            நரேந்திரசிங் தோமர் விவசாயத்துறை அமைச்சர் பஞ்சாப் விவசாயிகள் குறைந்தபட்ச விலை கொள்முதல் வாக்குறுதியை வலியுறுத்தி வருகிறார்களே ? விவசாயிகள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை . குறைந்தபட்ச கொள்முதல் விலை திட்டம் அப்படியே தொடரும் . இதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி தர தயாராக உள்ளோம் . இதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை எப்படி அறிவிக்கப்போகிறது ? இன்றுவரை எங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை . அரசு அதனை நிர்வாகரீதியான முடிவாக அறிவிக்கும் . நீங்கள் இப்படி சொன்னாலும் கூட விவசாய சங்கங்களுக்கு உங்கள் அமைச்சரவை ஒரு கடிதத்தைக் கூட அனுப்பவில்லையே ? அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பீர்கள் ? நாங்கள் இப்போதே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் இருக்கிறோம் . அவர்களின் பல்வேறு கோரிக்கை அம்சங்களை பரிசீலித்து வருகிறோம் . இதில் எங்களுக்கு தெளிவு கிடைத்தால் அவர்களின் மாற்றங்களை சட்டத்தில் புகுத்தி மாற்றி அவர்களைப் பார்க்க அழைப்பு விடுப்போம் . அரசு

பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி

படம்
        அதுல் சதுர்வேதி         விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே ? இந்த அமைப்பு தனியார் துறையினர் பால் , இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது . இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும் . இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் . வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும் . உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? நீங்கள் கூறும் உற்பத்தித்திறன் , பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன . நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும் , பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம் . அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் . இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்

விவசாயிகளுக்கான தகவல்தளம் உருவாகிறது!

படம்
pixabay விவசாயிகளுக்கான தகவல்தளம்! இந்திய அரசு, விவசாயத்துறையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தற்போது தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தகவல்களை, தமிழக  அரசு சேகரித்து வருகிறது. இத்தகவல்களை பெறும் மத்திய அரசு,  தேசிய  விவசாயிகள் தகவல்தளம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆய்வு, இது பரிசோதனை முயற்சிதான். இந்த ஆய்வுகளை மத்திய அரசு தனது மானிய உதவிகள் சரியானபடி விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அறியவே செய்கிறது.   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்து தகவல்தளத்திற்கான தகவல்களை திரட்டி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின்படி, இந்திய விவசாயிகளுக்கு, ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மானியம் விவசாயக் காப்பீடு,  மண்ணின் தரம், உரங்கள், மின்சாரம் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் இவை முறையானபடி விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன. இதற்காக, விவசாயிகள் பற்றி