நாங்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்! - நரேந்திரசிங் தோமர்

 

 

 

 

Narendra Singh Tomar Takes Additional Charge of Food ...

 

 

நரேந்திரசிங் தோமர்


விவசாயத்துறை அமைச்சர்


பஞ்சாப் விவசாயிகள் குறைந்தபட்ச விலை கொள்முதல் வாக்குறுதியை வலியுறுத்தி வருகிறார்களே?


விவசாயிகள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை. குறைந்தபட்ச கொள்முதல் விலை திட்டம் அப்படியே தொடரும். இதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி தர தயாராக உள்ளோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.


அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை எப்படி அறிவிக்கப்போகிறது?


இன்றுவரை எங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அரசு அதனை நிர்வாகரீதியான முடிவாக அறிவிக்கும்.


நீங்கள் இப்படி சொன்னாலும் கூட விவசாய சங்கங்களுக்கு உங்கள் அமைச்சரவை ஒரு கடிதத்தைக் கூட அனுப்பவில்லையே? அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பீர்கள்?



நாங்கள் இப்போதே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் இருக்கிறோம்.அவர்களின் பல்வேறு கோரிக்கை அம்சங்களை பரிசீலித்து வருகிறோம். இதில் எங்களுக்கு தெளிவு கிடைத்தால் அவர்களின் மாற்றங்களை சட்டத்தில் புகுத்தி மாற்றி அவர்களைப் பார்க்க அழைப்பு விடுப்போம்.


அரசு தனது விவசாய சட்டங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதா?


நாங்கள் இப்போது சட்டங்களிலுள்ள உட்பிரிவைப் பற்றி விவாதித்து வருகிறோம். இதுதொடர்பாக முடிவாக எதையும் கூறமுடியாது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஹரிகிஷன் சர்மா, வைத்தியநாதன் ஐயர்





கருத்துகள்