இடுகைகள்

இந்துத்துவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் கார

ஆணக்கொலைகளால் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்த நாட்டார் தெய்வங்கள்- ஆ.கொ.சா. பெ.கொ.அ

படம்
  ஆணவக்கொலைச் சாமிகளும், பெருமித கொலை அம்மன்களும் ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல்   திருநெல்வேலி, தூத்துக்கடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள நாட்டார் தெய்வங்களின் பூர்விக வரலாறு பற்றி இந்த ஆய்வு நூல் பேசுகிறது. நூலின் தொடக்கத்திலேயே நாட்டார் தெய்வங்கள் எப்படி பெருந்தெய்வ வழிபாட்டின் ஓரங்கமாக மாற்றப்படுகிறது என்பதை விளக்கி இந்துத்துவ சக்திகள் செயல்படுவதை ஆசிரியர் விளக்கி விடுகிறார். ஆகவே, நாட்டார் தெய்வங்கள் என்பது வேறு. அதன் வழிபாட்டு முறைகளே வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதில் உயிர்ப்பலி, கறிச்சோற்று படையல், கொடை, முளைப்பாரி ஆகியவை உண்டு. பெருந்தெய்வ வழிபாட்டில் இவையெல்லாம் இருக்காது. நாட்டார் தெய்வங்கள் முன்னெப்போதோ நம் கூடவே வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் சக மனிதர்களால் சாதி பெருமிதம், பொறாமை, காதல், சொத்து, பாலியல் வன்முறை, குடும்ப கௌரவம் ஆகியவற்றுக்காக பலியானவர்கள்தான். இவர்கள் மீது பின்னாளில் ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணத்தால் இறந்து போனவர்களை கொன்ற குடும்பத்தினர், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சுதை சிற்பமாக வடித்து வழிபடத் தொடங்குகிறார்கள்

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால்

இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

படம்
  உண்மை ஏற்படுத்தும் உறுத்தல் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன் . ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது . இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை . நிதானமாகத்தான் படித்து வருகிறேன் . இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள் . வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது . தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள் . சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார் . வீர்தாஸ் பெண்கள் , சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார் . உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே ? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர் . இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது . வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள் . கடந்த 16 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது . அதைப் படித்தேன் . இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது .

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின்

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்கள

ஒருவர் இந்து என்பதை வன்முறைக்கும்பல்கள் முடிவு செய்கின்றன! - ஷோபா டே, எழுத்தாளர்

படம்
              நான் எப்படிப்பட்ட இந்து என்பதை யார் முடிவு செய்வது ? ஷோபா டே(TOI) இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நான் என்னை மோசமான நபராக உணர்கிறேன் . அடையாளம் கண்டுள்ளேன் . இந்து என்ற அடையாளம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது . இந்து பெற்றோருக்கு பிறந்தேன் . இந்து வழியில் வாழ்கிறேன் . இதில் வெற்றி , தோல்வி , தேர்ச்சி , தேர்ச்சி பெறவில்லை என்றெல்லாம் சொல்ல ஏதுமில்லை . கூடுதலான எந்த பலன்களையும் நாம் இந்து என்பதற்காக பெற்றதில்லை . எனக்கு இருக்கும் தகுதிகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியாவில் நான் மோசமான இந்துவாக தோன்றுகிறது . இன்னும் கூடுதலான திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் இந்துவாக இந்தியாவில் வாழமுடியும் போல தோன்றுகிறது . நான் இந்து என்பதைக் காட்ட தனி அடையாளமாக பேட்ஜ் ஏதாவது அணிய வேண்டுமா என்ன ? இப்படி செய்தால் அது பொது இடத்தில் உள்ளாடைகளை எடுத்து வெளியே காட்டுவது போலத்தானே இருக்கும் . இந்து என்பதை வெளிக்காட்டி பிறரை விட அதிக சலுகைகளை பெறுவது தவறானதாக கருதுகிறேன் . இதைக்கூட பலரும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பேசுவார்கள் . இதைப்பற்றியெல்லாம்

இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

படம்
  இந்துத்து வா எனும் கொடூர அச்சுறுத்தல் கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது.  இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர்.  இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன.  குடியரசு கட்சியைச் சேர்ந்த

பொழுதுபோக்குபூங்காகவாக மாற்றப்படும் காந்தியின் சபர்மதி ஆசிரமம்!

படம்
  2019ஆம் ஆண்டே காந்தியின் சபர்மதி ஆசிரமம் புத்துயிர் அளிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இயற்கையான தடையாக கொரோனா வந்தது. இக்காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கிய பிரதமர் மோடி, இப்போது காந்தியின் பக்கம் கவனம் திருப்பியுள்ளனர்.  1,200 கோடி மதிப்பில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை நவீனப்படுத்தி புதுப்பிக்க உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. காந்தியை தேசத்தந்தை என்ற இடத்திலிருந்து அகற்றி அதில் ஆர்எஸ்எஸ் பிரிவினைவாதிகளை பொருத்தும் பணியை பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு அச்சாரமாக காந்தியை ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் அடையாளமாக்கி அசிங்கப்படுத்தியது. காந்தி வெறும் ஒருவரின் தூய்மை பற்றி மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தன்மை, அகிம்சை, சுய ஒழுக்கம் பற்றியெல்லாம் கூட பேசியுள்ளார். இவற்றில் தன்னுடைய பங்கு பற்றி நூல்களைக் கூட எழுதியுள்ளார். ஆனால் அதையெல்லாம் படிக்க தெரிந்துகொள்ள ஒன்றிய அரசுக்கு எந்த விருப்பமுமில்லை. ஈடுபாடும் இல்லை.  சபர்மதி ஆசிரமத்தை ஏழு அறக்கட்டளைகள் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிலையை சாதகமாக்கி மாநில அரசு மூலம்

ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

படம்
              தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது . அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது . ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது . ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது . ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை . வென்றது கொரோனாதான் . இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது . கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது . 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சேமிப்பு , செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது . வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது . தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது . பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது . இதன

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச