இடுகைகள்

தலைமை ஆசிரியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி மாணவர்களை கிராமங்களிலிருந்து வேன் வைத்து பள்ளிக்கு அழைத்து வரும் தலைமை ஆசிரியர்!

படம்
                   தெருவிளக்கு   பெரும்பாலான அரசு பள்ளிகளில் மேல்சாதி ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களின் தந்தை செய்யும் தொழில்களை அடிப்படையாக வைத்து, அதே விஷயங்களை பள்ளிகளில் செய்ய வற்புறுத்தி அடிப்பதுண்டு. தலித் என்றால் துப்புரவுப் பணி. டீக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால், பள்ளியில் டீயைப் போட மாணவிகளை, கட்டாயப்படுத்துவார்கள். இதுபோன்ற சல்லித்தனமான ஆட்களைக் கடந்து மிகச்சில ஆசிரியர்களே  சாதி/மத/இன மனநிலையைக் கடந்து ஆசிரியர் என்ற பணியைப் புரிந்து அதற்கேற்ப அர்ப்பணிப்பாக நடந்துகொள்கிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியர் திருச்செல்வராஜா. இவர், தனது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக சொந்த காசைப்போட்டு இரண்டு வேன்களை வாங்கி, இயக்கி அவர்களை கிராமத்திலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். பத்து கி.மீ. தூரத்திற்கு ஐந்து முறை செல்லும் வேன்கள், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான செலவுகளை தலைமை ஆசிரியர் ராஜாவே பார்த்துக்கொள்கிறார். ஓட்டுநருக்கான சம்பளத்தை மாணவர்களும் இயன்ற வகை...

குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

படம்
  மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.  இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள...