இடுகைகள்

பிணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத்களுக்கான மருத்துவ திட்டம்

படம்
  வருமுன் காப்போம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வாசகத்தை மனதால் உணர்ந்தால் போதும். சிறுவயதில் ஒருவரின் குற்ற அறிகுறிகளை ஆராய்ந்தால் அவரை எளிதாக சிகிச்சை பெறச் செய்து எதிர்காலத்தில் வளர்ந்து இளைஞராகி செய்யும் குற்றங்களையேனும் தடுக்கலாம். குறைந்தபட்சம் குற்ற சதவீதத்தையேனும்   குறைக்கலாம் அல்லவா? உளவியல் சிகிச்சை என்பது குழந்தையின், சிறுவர்களின் மனநிலைக்கானது மட்டுமல்ல. அவர்களது குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தவும்தான். மனநல சிகிச்சை அளிக்கும்போது அதன் பாதியில் கூட சிலர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவர் சிறப்பாக குணமடைகிறார் என மகிழ்ச்சியாக கூறுவதுண்டு. உண்மையில் அப்படி கூறுபவர், பிரச்னையை சரியாக கையாளும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது நண்பர், கணவர் திருந்திவிட்டார் முன்னேற்றம் தெரிகிறது என்பவர் தனது தேவையைக் குறைத்துக்கொண்டவராக இருக்கவேண்டும். ஏறத்தாழ தன்னையே தியாகம் செய்துவிட்டார் எனலாம். சைக்கோபதி நபர்களை சரியான பாதையில் திருப்ப நிறைய திட்டங்கள், சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. சிகிச்சைகள் பற்

பிணை கொடுப்பதற்காக உளவியலாளர்கள் கொடுக்கும் அறிக்கை!

படம்
  பிணை கொடுப்பதற்கான அமைப்பு வெளிநாட்டில் உண்டு. இந்த அமைப்பு குற்றவாளி யார், எப்படிப்பட்டவர், செய்த குற்றத்தின் இயல்பு ஆகியவற்றை அறிந்துதான் மனுவை பரிசீலிக்கிறது.. இந்தவகையில் உளவியலாளர் என்ன அறிக்கை கொடுக்கிறாரோ அதுவும் முக்கியம். இதில் குற்றவாளி பிரச்னையானவர் இல்லை என கொடுத்து வெளியில் சென்று குற்றம் செய்தால் உளவியலாளர் மட்டுமல்ல பிணை கொடுத்த அமைப்பும் மாட்டிக்கொள்ளும். கார்ல் வெய்ன் பன்டிசன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்த காரணத்தால் பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். ஆனால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு கார்லுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆறே வாரம், போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மோசமான குற்றச்செயல் செய்த நபருக்கு எதற்கு முன்கூட்டியே பிணை கொடுக்கிறார்கள்? கார்ல் என்ற நபருக்கு இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1961ஆம் ஆண்டு தொடங்கி 1984ஆம் ஆண்டு வரையில் பண்ட்சன் நிறைய பிணை விதிகளை மீறித்தான் சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகள் தண்டனை கொடுத்த வழக்கில் கூட பத்து மாதங்களில் பிணை வழங்கப்பட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். கார்லின் க

குடிமக்களின் அவசியமான உரிமைகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு! - கபில் சிபல்

படம்
                        தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்திய தேசியபாதுகாப்பு சட்டம் , தீவிரவாத த்தி்கு எதிரானது என்று கூறப்பட்டது . ஆனால் இந்த சட்டம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று முதலிலேயே அஞ்சப்பட்டது . அதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் , மாணவர்கள் , கல்வியாளர்கள் என பலரின் மீதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இவர்கள் மீது தேச விரோதி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை அமைதியாக்கி வருகிறார்கள் . மக்களவையில் உள்துறை அமைச்சர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேசும்போது , இந்த சட்டத்தில் தீவிரவாத த்திற்கு ஆதரவானர்களும் ., அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் . பிறருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டது . மனித உரிமைகள் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படாது என்று அமைச்சர் கூறினார் . ஆனால் சட்டம் நடைமுறையில் வேறுமாதிரி செய்லப்ட்டது . குற்றவாளிகள் என சந்தேகம் வந்தால் கூட ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு பிறகு ஆற அமர்ந்து ஆதாரங்களை சேகரித