சைக்கோபாத்களுக்கான மருத்துவ திட்டம்
வருமுன் காப்போம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வாசகத்தை மனதால் உணர்ந்தால் போதும். சிறுவயதில் ஒருவரின் குற்ற அறிகுறிகளை ஆராய்ந்தால் அவரை எளிதாக சிகிச்சை பெறச் செய்து எதிர்காலத்தில் வளர்ந்து இளைஞராகி செய்யும் குற்றங்களையேனும் தடுக்கலாம். குறைந்தபட்சம் குற்ற சதவீதத்தையேனும் குறைக்கலாம் அல்லவா? உளவியல் சிகிச்சை என்பது குழந்தையின், சிறுவர்களின் மனநிலைக்கானது மட்டுமல்ல. அவர்களது குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தவும்தான். மனநல சிகிச்சை அளிக்கும்போது அதன் பாதியில் கூட சிலர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவர் சிறப்பாக குணமடைகிறார் என மகிழ்ச்சியாக கூறுவதுண்டு. உண்மையில் அப்படி கூறுபவர், பிரச்னையை சரியாக கையாளும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது நண்பர், கணவர் திருந்திவிட்டார் முன்னேற்றம் தெரிகிறது என்பவர் தனது தேவையைக் குறைத்துக்கொண்டவராக இருக்கவேண்டும். ஏறத்தாழ தன்னையே தியாகம் செய்துவிட்டார் எனலாம். சைக்கோபதி நபர்களை சரியான பாதையில் திருப்ப நிறைய திட்டங்கள், சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. சிகிச்சைகள் பற்