இடுகைகள்

மோசடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்க வருமானத்துறை போல நாடகமாடி மோசடி செய்யும் அக்கா, தம்பி! மோசகல்லு - தெலுங்கு

படம்
  மோசகல்லு - தெலுங்கு மோசகல்லு தெலுங்கு விஷ்ணு, காஜல் அகர்வால், நவ்தீப் அர்ஜூன், அனு என இருவரும் சேரியில் பிறந்து   வளர்ந்தவர்கள். அக்கா, தம்பி என இருவருக்குமே அதிகளவு பணம் சம்பாதிப்பதே நோக்கம். இதில் அனு, பெண்களுக்கான நகைகளை தானே வடிவமைத்து இணையத்தில் விற்று வருகிறாள். வன்முறையான கணவரை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருக்கிறாள். அவள் கணவன், அவள் சம்பாதிக்கும் பணத்தை வீடு தேடி வந்து அடித்து உதைத்து பறித்து செல்கிறான். அர்ஜூன், கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டிற்கு பல்வேறு சேவைகளை வழங்குவதே   அவனது கம்பெனி நோக்கம். அதேநேரத்தில் அவன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதை டார்க் வெப்பில் விற்று பணம் சம்பாதித்து வருகிறான். இதை அவனது கம்பெனி முதலாளி கவனிக்கிறார். அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார். ஆனால் அதை அவரால் எப்படி என கூற முடியவில்லை. அர்ஜூன், ஐஆர்எஸ் என அமெரிக்க வருமானத்துறை பற்றிய ஐடியாவைக் கொடுக்கிறான். அதை வைத்து சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அமெரிக்க மக்களுக்கு போன் செய்து அவர்கள் வரியைக் கட

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண

பேராசை பூதம் 2 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  முதல் பகுதி பேராசை பூதம் 1 என வெளியாகிவிட்ட நிலையில், இந்த நூல் இரண்டாவது பகுதியாக வெளியாகவிருக்கிறது.  இந்த நூலில் பங்குசந்தை மோசடி, நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதியில் வரி ஏய்ப்பு, மக்களின் மின்கட்டணத்தை அரசு விதிகளைப் பயன்படுத்தியே நூதனமாக உயர்த்தியது, பத்திரிகையாளர்களை மிரட்டி அதட்டி வழக்கு போட்டு ஒடுக்குவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டா