இடுகைகள்

பிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

படம்
          குழந்தைகள் விற்பனை - என்ஜிஓக்களின் தில்லுமுல்லு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி , தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது . அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர் . இவர்கள் இருவரும் , இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர் . இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி . ஆர் . சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம் . இந்த அமைப்பு , மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது . காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது . தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது . மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட் , பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது . இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும் , மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது . இவையன

மயிலாப்பூர் டைம்ஸ் - பிச்சைக்கு இரங்கேல்!

படம்
giphy.com பிச்சை கேட்பதை வள்ளுவர் மட்டுமல்ல, சங்க காலம் முதற்கொண்டு தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறார்கள். பிச்சையை எப்படி கூறுகிறார்கள் என்றால் தங்கம், வெள்ளி நாணயம் மட்டுமல்ல, ஒருவர் வளர்க்கும் கால்நடைகளின் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது கூட தவறு என்று வரையறுக்கிறார்கள். நமக்கு வந்து சேர்பவர்கள் வேறு ரகமாக இருக்கிறார்கள். பள்ளி தொடங்கி வேலை பார்க்கும் இடம் வரை நான் பெரும்பாலான இடங்களில் இளிச்சவாயனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு அர்த்தம் நான் பொருட்களை ஒருவருக்கு கொடுத்துவிடுகிறேன் என்பதல்ல. அதை தெரிந்தே செய்கிறேன் என்பதுதான்.  இன்று பாருங்கள். எங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையான ஓட்டுநர் எப்போதும் பதினொரு மணிக்கு அங்குள்ள திண்ணையை யாருக்கும் தரமாட்டேன் என கிடையைப் போட்டு படுத்துவிடுவார். அவருக்கு அடுத்து இருக்கும் இடத்தில் பெண் நாய் ஒன்று படுத்திருக்கும். இல்லையென்றால்  இங்குள்ள இழுத்து மூடப்பட்ட சிறப்பு அங்காடிக்கு காவல் காக்கும் வெள்ளை நிற நாய் ஒன்று படுத்துவிடும். பெரும்பாலும் திண்ணைக்கு இவர்கள்தான் ஓனர்கள் போல. எனவே புதிதாக வந்து நின்ற டாடா டியாகோ கார் அருகே இ

பிச்சை எடுத்தேனும் வாழ்வது முக்கியம்!

படம்
பிச்சை எடுத்தாவது படி என்று சொல்லுகிற நாம், மாட்டின் நீருக்கு கூட பிறரிடம் உதவி கேட்க கூடாது. அதனை பிச்சையாக பெறக்கூடாது என்றும் கூறுகிறோம். தமிழ் இலக்கியங்களிலும் ஒன்றை உதவியாக கோரிப்பெறுவது என்பதை சரியான செயலாக கூறவில்லை. கொடுப்பதே முக்கியம் என்கிறார்கள். ஆனால் வேலையின்மை, கடன் ஆகியவற்றால் தடுமாறும் கிராமத்தினர் பலர், நகர்ப்புறங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றனர். உ.பியிலிருந்து புனே, மும்பை நகரங்களுக்கு வருபவர்களுக்கு உதவுவது பிச்சைதான். எல்லோரையும் கூறவில்லை. கைகால் ஊனமானவர்கள், சிறுமிகள் என பலரும் இதில் உண்டு. சென்னையில் வட இந்திய தனத்தில் தலையில் முக்காடும், கையில் பையும் கொண்டு சில குழுவினர் அலைந்து கொண்டிருப்பார்கள். நுங்கம்பாக்கத்தில் பணத்தை மட்டும் பிச்சை எடுக்கும் ஒருவரையும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவருக்கு பசிதானே பிரச்னை இந்தா சோறு என சோற்றுப்பொட்டலத்தைத் தந்தவுடன் அவர் அதிர்ந்துவிட்டார். அதை எங்கே வைப்பது என தடுமாறினார். பின் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அடுத்து கையேந்த தொடங்கினார். இந்த பிச்சை எடுக்கும் பழக்கம் ஈகைத்திருநாள் மாத த்