இடுகைகள்

வழக்குரைஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி

நான் எனது கடமையைத்தான் செய்தேன்! - பெரு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த வழக்குரைஞர்

படம்
  ஜோஸ் டெமிங்கோ பெரஸ் இவர்தான் இப்போதைக்கு பெரு நாட்டில் அதிகம் பேசப்படும் நபர். பெரு நாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு தள்ளியவர் இவர்தான்.  இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, அந்த அவமானத்திற்கு பயந்து தற்கொலைக்கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.  ஒரு வழக்குரைஞர், வலிமை வாய்ந்த முன்னாள் அதிபரை எப்படி எதிர்க்க  முடிந்தது  என்பது பலருக்கும் ஆச்சரியம். ஆனால் அவரது நண்பர்கள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி போதிலிருந்து அப்படித்தான். நேர்மையாக இருக்கவேண்டுமென நினைப்பார். பிறரிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது அவர்களில் கண்களில் தெரியாத பயம்தான் என்றனர்.  பிரேசிலின் ஓடேபிரச்சிட் என்ற நிறுவனம்தான் ஒப்பந்தங்களைப் பெற பணத்தை வாரி இறைத்திருக்கிறது. இந்த நிறுவனத்திடன் பணம் பெற்றுக்கொண்டு அரசு ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதாகதான் கார்சியா மீது வழக்கு. தொடக்கத்தில் நான் எந்த பணத்தையும் வாங்கவில்லை என்று கூறியவர், இதில் நிறைய

எனக்கு இன்ஸ்பிரேஷன் இசைதான் - ராபின் சர்மா

படம்
Pinterest/robin sharma அவர் ஒரு வழக்குரைஞர். ஆனால் திடீரென தன் வேலையைக் கைவிட்டு சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாறுகிறார். முதல் நூல், அறிமுகமில்லாதவர் என்பதால், தானே அச்சிடுகிறார். அவரது அம்மா அதனை திருத்துகிறார். முப்பது வயதில் அவர் எழுதிய அந்த நூல் தி மங் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி என்ற நூல். மெகா வெற்றி அந்த நூலுக்குப் பிறகு அந்த எழுத்தாளர் திரும்பிப் பார்க்க நேரமில்லை. இதுவரை 15 நூல்களுக்கு மேல் எழுதிய சாதனையாளர். ஆம். ராபின் சர்மாவைத்தான் மேலே குறிப்பிட்டேன். இவர் எழுதிய பதினைந்து நூல்கள் 75 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. வழக்குரைஞராக இருந்தீர்கள். திடீரென சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாற்றம் எப்படி சாத்தியமானது என்று சொல்லுங்களேன்.  நான் வெற்றிபெற்ற வழக்குரைஞர்தான். ஆனால் என் பணியில் எனக்கு திருப்தியில்லை. உள்ளே ஒரு வெறுமையான சூழ்நிலை. அப்போது தத்துவார்த்தமான சிந்தனைகளையும் அனுபவங்களையும் தேடி வந்தேன். அதுவே நான் தேடிய விஷயங்களை எனக்கு கண்டுபிடிக்க உதவின. அதை விவரித்து எழுதியதுதான் என்னுடைய முதல் நூல்.  உங்கள் அப்பா இந்தியர்