இடுகைகள்

அனந்தப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ