இடுகைகள்

உறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...

காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?

படம்
  காதல் மீட்டர்  4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.  டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.  சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...

காதல் மீட்டர் - சமூக தகுதிகள் திருமணத்தை தீர்மானிப்பதில் தோற்றுப்போவது ஏன்?

படம்
  காதல் மீட்டர் 3 ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும்.  அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன.  பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா.  இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவ...

காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?

படம்
  காதல் மீட்டர்  2 ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது? ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை ...

ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?

 ஒன்றாக சேர்ந்து... உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள்.  டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

படம்
       காமசூத்திரம் நாராயண ரெட்டி விகடன் பிரசுரம் ப.1000க்கும் மேல் விலை 230 நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம். வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம். காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ ...

மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!

படம்
  ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும். இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. ...

அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்

படம்
      அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள் மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில்  செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன...

உரையாடலில் தேவையை, உணர்வுகளை வெளிப்படுத்த கற்கவேண்டும்!

      நம் உணர்வுகளை வெளிப்படுத்த கற்க வேண்டும்! ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். மனைவிக்கு கணவர் தான் பேசினால் அதற்கு பெரியளவில் எதிர்வினையோ, கருத்து கூறுதலோ செய்வதில்லை என வருத்தம். கோபத்தில் அவர், நீங்கள் எதையும் பேசாமல் சுவர் போல இருக்கிறீர்கள் என கூறிவிடுகிறார். இப்போது அங்கே என்ன விதமான உரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். பெரிதாக ஏதும் நடக்காது. கணவர் சுவர் என்ற விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு முன்னைவிட மயான அமைதியை கடைபிடிப்பார். மனைவிக்கு கணவரோடு உரையாடுவது இஷ்டம். அதை அவர் தனது உணர்வுநிலை இப்படி இருக்கிறது என கூறலாம். நீங்க என்னிடம் பேசினால் சந்தோஷமா இருக்கும் என கூறினால், அங்கு உரையாடல் நடக்கலாம். இந்த வாக்கியத்தை கவனித்தால், இதில் அவர் தனக்கு என்ன தேவை என்று கூறியிருக்கிறார். கணவர் மீதான விமர்சனம் ஏதுமில்லை. முன்முடிவுகள் இல்லை. மனைவி அவரது மனநிலையைக் கூட குறிப்பிடலாம். தவறில்லை. தேவையை வெளிப்படையாக கூறுவதில் தவறேதும் இல்லை. ஒரு நாடு இருக்கிறது. அங்கு மக்களுக்கான புதிய திட்டங்களை சிந்தனையாளர்கள் குழு உருவாக்குகிறது. அதை அ...

பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

படம்
  சந்தோஷம்  நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை.  படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நி...

கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
ஆதிக்கவாதியாக ஒருவர் செயல்பட முடிவெடுத்துவிட்டார். சரி, ஆனால், அவர் முதலில் சில கேள்விகளை அவராக கேட்டுப் பார்த்து அதற்கான பதில்களைப் பெறவேண்டும். அப்போதுதான் தான் ஏற்கவேண்டிய பொறுப்பு பற்றி தெளிவாக அறிய முடியும். இப்போது கேள்விகளைப் பார்ப்போம். நீங்கள் குரூரமான அல்லது இரக்கம் கொண்ட ஆதிக்கவாதியா? நீங்கள் சாடிஸ்டா? ஆம் எனில் உங்களை எப்படி வரையறை செய்வீர்கள்? உங்கள் இணையர் மாசோசிஸ்டாக இருந்தால் அது உங்களை பாதிக்குமா? ஒரு இணை அல்லது பல இணையர்களை பயன்படுத்துபவரா? பல இணையர்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டவரா? உங்கள் இணையர்களுக்கான விசுவாச விதிகளை தனியாக வகுத்து வைத்தீர்களா? அது உங்களுடையதிலிருந்து மாறுபடுமா? ஆதிக்கவாதியாக இருப்பது பிறரை விட உங்களை தனித்து காட்டுவதாக நினைக்கிறீர்களா? ஒரு உறவுக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளை மதித்து நடப்பது என்பது எந்தவகையில் முக்கியமானது? கீழ்படிபவரைத் தண்டிப்பது உண்டா? ஆம் என்றால் எப்படி? இணையர்களுக்குள் முரண்பாடு வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்? உங்களுக்கு சட்டென கோபம் வருமா? அப்படி வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? ஒரு மாசோசி...

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற...

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க...

டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

படம்
டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார். ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை. ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள...