இடுகைகள்

இதழியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!

படம்
  அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார். அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார். கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான். ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏராளமான

இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

படம்
  ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது. ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்த்து

பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது.  டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.  அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நாம் கூறமுடியும். அதைத்தான்

பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

படம்
  வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை   வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்   செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்   ஜாக்கிரதை தேவை.   பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது நல்லது. பொது விவகாரங்

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

உண்மையை வெளிப்படுத்த புலனாய்வு செய்தி முறை! - எதிர்கொள்ளும் விளைவுகள்

படம்
  பத்திரிகையாளர் அவர் நாட்டில் உள்ள சட்டங்களைப் பின்பற்றித்தான் செய்தி சேகரிக்க வேண்டும். ஒருவேளை நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை அரசு மறைக்கிறது என்றால் அப்போது அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து செய்தி சேகரிக்கலாம். இந்த ஒரு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு எந்த வழியிலும் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் சென்று செய்தி சேகரிக்கக்கூடாது. அப்படி சேகரித்து வெளியிடுவது மக்களின் நலனுக்காக என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வகையில் பத்திரிகையாளர், வெளியிடும் நாளிதழ், ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் செயல்பாடு என்பது சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த முறையிலும் பத்திரிகையாளர், நிறுவனம்   வழக்குகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. செய்திகளை சேகரிப்பதில் விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்து பிற சமயங்களில் சட்டத்திற்கு உட்பட்டு செய்தி சேகரிப்பதே நல்லது. அரசு அமைப்பு, அல்லது தனியார் அமைப்பு, அதிகாரிகள், தனிநபரின் போனை ஒட்டுக்கேட்பது, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவது ஆகியவற்றைச் செய்து ச

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

செய்தி ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம்

படம்
  பத்திரிகையாளர்களுக்கு செய்திகளைக் கொடுக்கும் ஆதார ஆட்கள் பல்வேறு துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிக் கொடுக்கும் செய்தியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். செய்தி ஆதார மனிதர்கள் இல்லையென்றால் துறைசார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நாளிதழ்களில் எழுதுவது சாத்தியப்படாது. செய்திகளைத் தரும் ஆதாரங்களிடம் தொழில்முறையாக நேர்மையாக, மரியாதையாக நடந்துகொண்டு வருவது முக்கியம். செய்தி ஆதாரங்களிடம் மிகவும் நெருங்கிப் பழகுவது, செய்தியைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடும். எனவே, சற்று தள்ளி இருந்து செய்திகளைப் பெறுவது நல்லது. இந்த முறையில் செய்திகளை பல்வேறு கோணத்தில் பார்வையில் பார்த்து எழுத முடியும். பத்திரிகையாளர், ஆதார மனிதர்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை உருவாவது முக்கியம். அப்போதுதான் செய்திகளை எளிதாக பெறமுடியும். செய்தி ஆதார மனிதர்களின் பெயர்களை, பத்திரிகையாளர் எந்த சூழ்நிலையிலும் வெளியிடக்கூடாது. வெளியிடும் செய்தி காரணமாக பத்திரிகையாளர் அரசு அதிகாரத்தால் மிரட்டப்படும்போது கூட செய்தி ஆதார மனிதர்களை பாதுகாக்க வேண்டும். செய்தி ஆதார மனிதர்கள் கொடுத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தவறானவை எ

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது முறை

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களில் எழுதிய