பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!
அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார். அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார். கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான். ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏராளமான