இடுகைகள்

எழுதுக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று  10.1.2022 இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன். அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.   இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய ச

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

படம்
  எழுதுக - ஜெயமோகன் எழுதுக ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும்.  ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார்.  யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும்.  எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூ