இடுகைகள்

நாளிதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நூல் எழுதலாம்!

படம்
  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நரசிங்கபுரம் 3/1/2023   அன்புள்ள அன்பரசு சாருக்கு வணக்கம். வலைப்பூ உங்களை வளமுடன் இருக்கச் செய்யும் என நம்புகிறேன். சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம் ஊக்கம் தருவதாக இருந்தது. மிக்க நன்றி! நீங்கள் வழிகாட்டியது போல சென்ற வாரம் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். இன்னும் படிக்கத் திறக்கவில்லை. காரணம், தீராநதி மாத இதழ். ஆம். இதழ் முழுவதும் படித்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துடனான நேர்காணல் சிறப்பாக இருந்தது. தான் சந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம் என கனடாவில் வாழும் அகதிகளைப் பற்றி கூறியுள்ளார். பல மனிதர்கள் புத்தகங்களை எழுதுகின்றனர். சில மனிதர்கள் புத்தகமாகின்றனர் என்ற கருத்து அவரது எழுத்தில் இருந்தது. அதேபோல, ‘தி மேன் ஹூ சோல்டு இஸ் ஸ்கின்’ என்ற படக்கதையும் சிறப்பு. ஆண்களின் தோலை விபசாரமாக்குவது பற்றிய கதை. 2020இல் படம் வெளியாகியுள்ளது. மாணவர் இதழ், 2ஆம் தேதி முதல் பறக்கிறது. அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர். எனக்கு எழுத்தாளர்கள் பலர் எழுதுகின்றனர். செர்ஜின் என்ற எழுத்தாளருடனான சந்திப்பு ஊக்கம் தருவதாக இருந்தது. மேலும் அவரிடம்தான் அ

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த

ஆழமான துயர் நிறைந்த ஷிபுவின் வாழ்க்கை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.1.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உங்கள் உடல், மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன். மறைமலை அடிகள்  எழுதிய கடிதங்களைத் தரவிறக்கி வாசித்தேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை. தனித்தமிழில் எழுதுவது, சைவத்தை பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழக அரசு  மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன. இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன்.  இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன். அவர் தனது மனைவி, குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார். வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன். கிராமத்து சூப்பர் ஹீரோ கதை. நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான். அதாவது, நாடக கலைஞரான குரு சோமசுந்தரம்.  அம்மா, காதலி என இரண்டையும் சுற்றியுள்ளவர்கள் இழக்கிறார். வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார். அதில் ஏதும் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. நாயகனான ஜெய்சன் என்பவரின் வாழ்க்கை பெரிதாக ஈர்க்கவில்லை. ஷிப

எரிச்சலோடு மன அழுத்ததோடு செய்யும் நாளிதழ் வேலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  29.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது. குரல் அப்படித்தான். சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார். இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது.  2022ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன். 624 பக்கம். சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது. வேலைச்சுமை தான் காரணம்.  செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது.  புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை. இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!  அன்பரசு pinterest

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  முஸ்லீம்

மனநலக்குறைபாடு கொண்டவர்களோடு மல்லுக்கட்டு! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  7.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உடல்நலனோடு மனநலனை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தாலும் உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள். நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது.  அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர், இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார். என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர். எனவே, அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன். ஆசையா, நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன்.  நன்றி! அன்பரசு  --------------------------------------------------- 11.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள். கட்டுரைகள் எழுதி கணினியில் சேமிக்கத் தொடங்கிவிட்டேன். அலுவலகத்தில் லெஜண்ட் ஓவியரிடம் மட்டும்தான் பேசுகிறேன். கடவுளின் முகம் அவதாரங்களில் மாறி வருவதைப் போலவே சூழலுக்கு ஏற்ப அதி

பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள உதவிய எழுத்தாளர்களின் கருத்துகள்! - கடிதம் - கதிரவன்

படம்
  30.10.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல். தி.நகரில் நல்ல கூட்டம். சூப்பர் மார்க்கெட்டிலும் கூட மக்கள் திரள் அதிகம். இன்று குங்குமம் வார இதழில் தலைமை உதவி ஆசிரியர் த.சக்திவேலைப் பார்த்தேன். வடபழனியிலுள்ள அவரது அறையில் சந்தித்தோம். ஸ்குயிட் கேம் 2 எபிசோடுகளைப் பார்த்தோம். கொரிய இயக்குநர் வெப் தொடரை உளவியல் புரிதலோடு நன்றாகவே எடுத்திருக்கிறார்.  வன்முறை அதிகம் என்பதால் பலரும் பார்க்கத் தயங்கலாம். சக்தி சாருக்கு அலுவலகத்தில் புதிதாக ஹெச்பி கணினி வாங்கித் தந்திருப்பதாக சொன்னார். கடந்த இருவாரங்களாக சனிக்கிழமை மட்டும் கூடுதலாக விடுமுறை எடுத்துவிட்டேன். ஆபீஸ் சென்று மோசமான மனிதர்களை சந்திப்பதே சலிப்பூட்டுகிறது. ஏதாவது படிக்க நினைத்தேன். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது முக்கியம் அல்லவா? எங்களது நாளிதழ் எட்டாம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். முதல் வாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்.  இந்த முறை எனக்கு பக்கம் கூடியிருக்கிறது. எனவே, வேலைச்சுமையும் கூடுதல்தான். ஒவ்வா

தீக்கதிரை வாசிக்க கொடுக்கும் கேரள சேட்டன்! கடிதம் - கதிரவன்

படம்
  10.10.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் போனில் பேசியது மகிழ்ச்சி. நான் இப்போது அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு என்னுடைய வலைப்பூவை  எழுதிக்கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைப்பதுதான் காரணம். அலுவலகத்திற்கு அருகிலுள்ள டீக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழ் கிடைக்கிறது. இதை கடைக்காரரே வாங்கிப் போடுகிறார். அதை பெரும்பாலும் படிப்பதே நான்தான். அவர் மாத்ருபூமி வாங்கிப் படிக்கிறார். விலை ஏழு ரூபாய். மலையாளம் படிக்க பேச அறிந்தவர். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது.  மாலையில் 3 மணிக்கு டீகுடித்தபடி தீக்கதிர் நாளிதழ் படிப்பது வழக்கமாகி விட்டது. டெய்லி புஷ்பம் வெளியில் பத்திரிகை விற்கிறதோ இல்லையோ ஊழியர்களுக்கு நாளிதழை வலுக்கட்டாயமாக போட்டு நிறைய சம்பாதிக்கிறது. இது என்ன ராஜதந்திரம் என எனக்கு புரியவில்லை. நான் டெய்லி புஷ்பத்தை படிப்பதில்லை. பக்கத்து அறை ஐயர் படித்தபிறகு கொண்டு வந்து தருவார். அப்படியே வாங்கி எடைக்கு போட்டுவிடுவேன்.  பிரன்ட்லைன் இதழில் மோடியின் பிரிவினைவாதம் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து வருகிறேன். நன்றி! அன்பரசு  

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழிய

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pixabay அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும்  ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.  சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.  நன்றி சந்திப்போம் அன்பரசு  2.11.2021

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி