எரிச்சலோடு மன அழுத்ததோடு செய்யும் நாளிதழ் வேலை! - கடிதங்கள் - கதிரவன்

 











29.12.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது. குரல் அப்படித்தான். சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார். இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது. 

2022ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன். 624 பக்கம். சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது. வேலைச்சுமை தான் காரணம். 

செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது.  புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை. இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி! 

அன்பரசு

pinterest




கருத்துகள்