விவசாய கழிவுப்பொருட்களிலிருந்து காகிதம் செய்யலாம்! - சுபாம் சிங், வேதியியல் பொறியாளர்

 











விவசாய கழிவுகளிலிருந்து அற்புத பொருட்கள்!



மகாராஷ்டிரத்தின் புனே நகரைச் சேர்ந்தவர், சுபாம் சிங். இவர் கிரேஸ்ட்(Craste) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயக் கழிவுகளைப் பெற்று அதை பேக்கேஜிங் பொருட்களாக, மேசைகளாக மாற்றி வருகின்றது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 டன்கள் விவசாயக் கழிவுகள் நெருப்பிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது. இப்பிரச்னையைத் தீர்க்கவே கிரேஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. வேதிப்பொறியியல் படித்தவரான சுபம் சிங், சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து விவசாய கழிவுகளில் இருந்து மேசை, நாற்காலிகளை செய்யத் தொடங்கினார். இவற்றில் மிஞ்சும் கழிவுகளை விவசாய நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம். இவரது ஆராய்ச்சியைப் பார்த்த புது டில்லியியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான பைராக் (BIRAC) கிரேஸ்ட் நிறுவனத்தைத் தொடங்க நிதியுதவியை அளித்தது.

  ”சர்க்குலர் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயக்கழிவுகளை பல்வேறு பொருட்களாக மாற்றுகிறோம். இந்தியா மரப்பொருட்களுக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை நம்பியுள்ளது. ஆனால், விவசாய பொருட்களிலிருந்து மேசை, நாற்காலிகளைச் செய்யமுடியும். இதனால் இந்தியா இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ” என்றார் சுபாம் சிங். 

https://craste.co/

https://thestorywatch.com/this-company-is-solving-two-major-problems-plastic-packaging-stubble-burning-with-their-innovative-technology/

https://shantihearthospital.com/engineers-unique-innovation-turns-farm-stubble-into-beautiful-furniture/

கருத்துகள்