நாக்கை உயிர்ப்பித்த சுலைமானி தேநீர் - கடிதங்கள் - கதிரவன்
புராணங்களின் சுவாரசியமான மறுபுனைவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை . எனவே , சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன் . அவர் , ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார் . எனவே , நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன் . காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம் . ஒருவேளை உணவு , ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம் . அவரது அறையில் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம் . ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார் . அது மட்டுமே சங்கடம் . மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் . விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயக்குநர் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார் . வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம் . தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம் . அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள் . ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை . கனிமச்சுரங்