இடுகைகள்

திரில்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிடியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள்!

படம்
  தி ஃபேம் கேம் நெட்பிளிக்ஸ் இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் மாதுரி திடீரென காணாமல் போகிறார். இதைத்தொடர்ந்து நமக்கு அவரைப் பற்றிய நிறைய ரகசியங்கள் தெரிய வருகின்றன. இதனை இயக்குநர் கரண் ஜோகர் சிக்கலான குடும்ப நிகழ்ச்சி என கூறியுள்ளார். இந்த  இந்த நிகழ்ச்சி இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி விட்டது.  பாரார், ஜீ 5 இது பெண்களைப் பற்றிய கதை. இப்போது பெண்களைப் பற்றிய கதைகள் ஓடிடியில் நிறைய வருகின்றன. அந்த வகையில் அதிக பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி பெற வாய்ப்புள்ளது.  மாய் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு. ஆனால் அதற்காக நீங்கள் இதனை பார்க்க வேண்டியதில்லை. 47 வயதான பெண், வாழ்க்கையோட்டத்தின் இடையே ஒரு குற்றத்தில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்பதே கதை. வாமிகா காபி, ரைமான் சென் என நம்பிக்கைக்குரிய நடிகையர் நடித்துள்ளனர்.  ஃபோர் மோர் ஷாட்ஸ் ஃப்ளீஸ் அமேசான் பிரைம் பெண்களுக்கு இடையிலான பல்வேறு முரண்பாடான உணர்ச்சிகளின் தொகுப்புதான் கதை. தாராள மனது கொண்டவர்கள் மட்டும் பார்ப்பது இதயத்திற்கு நல்லது.  ஹஸ் ஹஸ் அமேசான் பிரைம் தொண்ணூறுகளில் நமது கனவுக்கன்னியாக இருந்த ஜூகி சாவ்லா, ஆயிஷ

ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்

படம்
                ஹூ எம் ஐ ஜெர்மனி திரைப்படம்    படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல் . ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு , பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர் . படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று . பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் . அந்த வீட்டில் வேறு யாருமில்லை . அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது . அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான் . அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர் . கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான் . அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன் . அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள் . ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான் . அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளே கதை .    முழுக்க கணினியை வைத

காணாமல் போன மகளைத் தேடும் தந்தையின் போராட்டம்! - கதம் - கிரண்

படம்
              கதம் தெலுங்கு   Director: Kiran Kondamadugula Produced by: Harsha Pratap, Srujan Yarabolu Starring: Bhargava Poludasu, Rakesh Galebhe, Poojitha Kuraparthi Music by Sricharan Pakala Cinematography Manojh Reddy   முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட தெலுங்கு படம் . படத்தின் கதை பழிக்குப்பழி வகைதான் . ஆனால் அதனை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதில்தான் படம் நிறைய மாறுபடுகிறது .    ரிஷி என்ற இளைஞர் மருத்துவமனையில் இருக்கிறார் . அவருக்கு நினைவுகள் அழிந்துவிட்டது என மருத்துவர் கூறுகிறார் . விபத்தில் அப்படி ஆகிவிட்டது என அவரது பெண்தோழி ஆறுதல் சொல்லுகிறார் . அவரை அழைத்துக்கொண்டு காரில் செல்லும்போது திடீரென வழியில் கார் நின்றுபோகிறது . அந்த வழியில் அவர்களை பெட்ரோல் பங்கில் கவனித்து வந்த மர்ம மனிதர்( Bhargava Poludasu ) அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார் . ஆனால் அங்கு சென்றதும் ரிஷிக்கு ஏதோ தவறான இடத்திற்கு வந்துவிட்டோம் என உள்ளுணர்வு எச்சரிக்கிறது . அதுபோலவே பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது . ரிஷியின் பெண்தோழியை கற்பழிக்க மர்ம மனிதரின் நண்பர் முயல்

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சர

கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  2019 - தெலுங்கு இயக்கம் ஒளிப்பதிவு இசை கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.   886 × 1024 கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன. ஆஹா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி வு என அன