இடுகைகள்

ஆழ்கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

படம்
  ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து! கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்.  250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.    கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்ள கான்க்ரீட் கலவையில், இறந்துபோனவரின் ச

கடலில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான தங்கப் புதையல்கள்!

படம்
  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கம்! ஆங்கில சாகச பயண திரைப்படங்களில் பெரும் சுவாரசியம் தருவது  புதையல் தேடும் பகுதிகள்தான்.  நிலத்தில் உள்ள தங்கப் பொக்கிஷங்களை பெருமளவு கண்டுபிடித்துவிட்டோம் ;சரி, ஆனால் கடலில் கிடந்தால் கிடக்கட்டும் என  விட்டுவிட முடியுமா? தோராயமாக கடலில் 45 ஆயிரம் டன்கள்(1 டன் - 907 கி.கி) தங்கம் கடலில் ஆதரவின்றி கிடக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  1872 ஆம் ஆண்டு வேதியியலாளர்  எட்வர்ட் சோன்ஸ்டட்(Edward  Sonstadt)  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கப் புதையல்களைப் பற்றி நம்பகமான தகவல்களை உலகிற்கு சொன்னார். உடனே  ஆய்வாளர்கள், கடல்பயணிகள் ஆகியோருக்கு பொக்கிஷப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடல்நீரிலுள்ள தங்கத்தை கணக்கிட பல்வேறு செயல்முறைகள் உண்டு.  கடல் நீரில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உண்டு. அவற்றிலிருந்து தங்கத்தை  தனியே பிரிக்க அதனை ஆவியாக்க வேண்டும். இரண்டாம் வழிமுறை, அதிலுள்ள சோடியம்,  குளோரின் உப்புகளை தனியாக பிரித்தெடுக்கலாம். மூன்றாவது வழிமுறை, தங்கத்தை கரைத்து நீரிலிருந்து தனியாக எடுப்பது. இதற்கு பல்வேறு இயற்கையான கரைப்பான்களை பயன்படுத்தலாம். நான்காவது வழி