இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

 










ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து!


கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள். 

250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.   

கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்ள கான்க்ரீட் கலவையில், இறந்துபோனவரின் சாம்பலைக் குழைத்து பந்து வடிவத்தை உருவாக்குகிறார்கள். 

பவளப்பாறைகளுக்கு, பாறைப்பந்துகளே மாற்று என இதனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். எரிப்பது, புதைப்பது ஆகியவற்றுக்கு மாற்று கடலுக்கடியில் பாறைப் பந்துகளை அமைப்பது என கருத்து கூறுகிறார்கள். ஆனால் இதிலும் பிணத்தை எரித்த சாம்பலைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  ஒரு உடலை எரித்தால், 400 கி.கி. கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. பாறைப்பந்துக்கு பயன்படும் சிமெண்ட் உற்பத்தி துறையால்,  உலகளவில் 8 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீடு உருவாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 


தகவல்
The Guardian
https://www.theguardian.com/environment/2022/feb/21/reef-ball-burials-the-new-trend-for-becoming-coral-when-you-die

கருத்துகள்