பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

 










இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. 

இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். 

அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை. 

தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இது எந்தளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதனை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் உருவாகலாம். 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் சாப்பிடும் பொருட்களில்  சத்துக்கள் எந்தளவு உள்ளன, ஆரோக்கியமானதா, இல்லையா என்று  எளிதாக பார்த்த உடனே தெரிந்துகொள்ளலாம். 

விரும்பினால் ரேட்டிங் சிஸ்டத்தை பெறலாம் என்றால், நொறுக்குத்தீனி வகைகள் இதைப் பெறுவது கடினம். 

அக்மார்க் போல இல்லாமல் ஹெல்த் ரேட்டிங் சிஸ்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் நல்லதுதான். 

பிசினஸ் ஸ்டாண்டர்ட்

சர்லீன் டி சூசா 

கருத்துகள்