மாஃபியாவுக்கு எதிரான கோவை மனிதர்!

 










கோவையிலுள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன். 50 வயதாகும் இவர், சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து நில ஆக்கிரமிப்பை எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில், வீடு, நிறுவனம் என எது மாநகராட்சியால் அகற்றப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்று சந்தோஷப்படும் ஆன்மா கோவையில் தியாகராஜனாகத்தான் இருக்க முடியும். 

ஆர்டிஐ தகவல்கள் மூலம் அரசு நிலங்களைக் கண்டுபிடித்து அதனை பிறர் ஆக்கிரமிக்காதபடி தடுத்து வருகிறார். அதனை வேலியிட செய்யுமளவு அக்கறை காட்டுகிறார். பெரும் சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி  இந்த வேலையை கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகிறார். இதுவரை 26 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களை மீட்டு அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதன் சந்தை மதிப்பு 300 கோடிக்கும் அதிகம். வீட்டுநலச்சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை கூட தியாகராஜன் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறார். 

கோவை மாநகராட்சியில் 50 ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடித்து அதில் 40 இடங்களை மீட்டுக்கொடுத்துள்ளார். இதில் பத்து இடங்களில் சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.  2004ஆம் ஆண்டு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். அப்போது தியாகராஜனுக்கு வயது 34. 

சௌரிபாளையத்தில் உள்ள ஜிஆர்ஜி நகரில் உள்ள நிலத்தை மூன்று பேர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கு இன்றைய வரைக்கும் நடந்து வருகிறது. பூங்கா, கோவில் ஆகியவை கட்டப்பட்டபிறகு  உள்ள மீதி நிலத்தை மூன்றுபேர் ஆக்கிரமித்தனர். இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என தியாகராஜன் நினைக்கிறார். 

என்னுடைய நோக்கமெல்லாம் அப்பாவியான மக்கள் ஏமாற்றப்படக்கூடாது. இந்த வகையில் சமூகநலக்கூடம், பூங்கா கட்டப்பட ஒதுக்கப்பட்ட நிலங்கள் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன என்பதை மாநகராட்சி வலைத்தளம் பட்டியலிட்டுள்ளது. இதனை 2013இல் வெளியிட்டுவிட்டது. ஆனால் ஒன்பது ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் இப்படி செயல்படாமல் இருக்கும் நிலையை சரி செய்ய நினைக்கிறேன். தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சி இந்த வகையில் முன்னுதாரண மாநகராட்சியாக  மாறும் என நம்பி உழைத்து வருகிறேன் என்றார் தியாகராஜன். 

செந்தில்குமார் எஸ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

Pinterest






கருத்துகள்