ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்
கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்