இடுகைகள்

பனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை

கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

படம்
  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம் கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்படுத்

சாப விடுதலைக்காக குன்லூன் கல்லறைக்குச் செல்லும் தொல்பொருள் குழு! - குன்லூன் டாம்ப் - சீனதொடர்-

படம்
  குன்லூன் டாம்ப் குன்லுன் டாம்ப் 2022 சீன டிவி தொடர் மூல நாவல்- கேண்டில் இன் தி டாம்ப் – ஸாங் மூ யே ராகுட்டன் விக்கி ஆப் சாகசத் தொடர் இயக்குநர் – ஃபெய் ஸென் ஷியாங்       ஓல்ட் ஹூ, ஃபேட்டி, ஒல்ட் ஜின், ஷிர்லி யாங் இந்த நால்வரும் தொன்மையான பொருட்களை தேடித் திரியும் ஆட்கள். கல்லறைகளுக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து வந்து விற்பதுதான் வேலை. ஒருமுறை இப்படியான வேலைக்கு செல்லும்போது ஓல்ட் ஹூ (ஹூ பாயி), ஃபேட்டி (வாங் கை சுவான்) ஷிர்லி யாங் ஆகியோரை வைரஸ் ஒன்று தாக்குகிறது. தொன்மை கலாசாரப்படி கல்லறைக்குள் நுழைபவர்களை தாக்கும் சாபம் இது. இதன் பெயர் ரெட் ஸ்பாட் கர்ஸ். இதன்படி இதற்கு பரிகாரமாக தீயசக்தி ராஜ்யமான குன்லுன் எனும் இடத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் போகாவிட்டால் வைரஸ் தாக்கி உயிர் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த மூவரையும் பயன்படுத்தி பொக்கிஷங்களை சம்பாதிக்க தொன்மை பொருட்களை விற்பவரும் செல்வந்தருமான மிங்க் யூ ஒரு மறைமுகத் திட்டம் வகுக்கிறார். இதன்படி, பொக்கிஷங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் தன் தந்தை குன்லூன் டாம்பில் இறந்துபோய்விட்டார். உடலை மீட்க வேண்டும் என்

உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் பற்றி சிறு பார்வை - இயற்கை 360 டிகிரி

படம்
  ஆண்டு முழுவதும் வெப்பம் இருக்கும் புல்வெளிப்பகுதி. ஆப்பிரிக்காவின் சாவன்னா பலருக்கும் நினைவுக்கு வரலாம். அதேதான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இங்கு, வெப்பம் இருந்தாலும் மழையும் பெய்வதுண்டு. இதில் முளைக்கும் புற்களை தின்ன வரிக்குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் வருகின்றன. அப்போது அதை வேட்டையாடி உணவாக உண்ணும் உயிரினங்களும்தானே வரும்? ஆம் சிங்கம் உள்ளிட்ட இரையுண்ணிகள் இதை தமது ஆகாரமாக்கிக்கொள்கின்றன.  சாவன்னா துருவப்பகுதி நாம் வாழும் உலகம் பூமியில் நமது வாழ்க்கை முதன்முதலில் கடலில்தான் தொடங்கியது. 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, (ஒரு பில்லியன் - நூறு கோடி). உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது. அப்போது பூமியில் பல்வேறு இயல்புகள் கொண்ட நிலப்பரப்புகள், நீர்ப்பரப்புகள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.  ரோனி வடதுருவப்பகுதியில் ஆர்க்டிக் கடல் சூழ்ந்துள்ளது. தென்பகுதியில் அன்டார்டிகா அமைந்துள்ளது. எனவே இருதுருவப் பகுதிகளிலும் உறையும் பனி உள்ளது. இங்கும் உயிரினங்கள் உள்ளன. இவை குளிரைத் தாங்கும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. உடலில் அடர்த்தியான ரோமம், சேம

சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா? உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள்.  சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்  உள்ளது.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன? பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.    https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/ https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867 https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/

வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

படம்
  தெரியுமா? சிவப்புநிற பனி! துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.  பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை.  டைனோசர் தூக்கம் டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு நெருங்கிய தொடர்புகொண்ட உயிரின படிமம

பனி உருகும் சத்தம்!

படம்
  pixabay பனி உருகும் சத்தம்!  2017ஆம் ஆண்டு ஸ்விஸ் ஆல்ப்ஸில் எய்கர் மலைச்சிகரத்தில் பனிக்கட்டி உருகி நீராக மாறியது. இப்படி பனிக்கடி உடைந்து நொறுங்கி நீராவது யாரும் பார்க்காமல் நடைபெற்றது. பனிக்கட்டி உடையும் ஒலி என்பது மனிதர்களால் காதில் கேட்க முடியாத குறைந்த ஒலி அளவைக் கொண்டது. இதனால் என்ன நடந்தது என்பதை மக்கள் பின்னர்தான் அறிந்தனர். பனி உடையும், வீழும் அதிர்வு, ஒலி ஆகியவற்றை வைத்து உருகிய பனியை எளிதாக கணக்கிட முடியும்.  குறைந்த அலைநீளம் கொண்ட ஒலிகளை இன்ஃப்ரா சவுண்ட் (கேளா ஒலி அலை)என்று அழைக்கின்றனர். அதிக தொலைவிலிருந்து பயணப்படும் ஒலி அலைகள் இவை. செயல்பாட்டிலுள்ள எரிமலைகளை  கண்காணிக்க கேளா ஒலி அலைகளைஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த அலைகளைப் பனிச்சரிவை அளவிட பயன்படுத்தினாலும் ஐஸ்கட்டிகளின் உருகுதல், உடைந்து நொறுங்குவதை அளவிட முதன்முறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.  காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை வைத்து கேளா ஒலியை இயக்கி பதிவு செய்தால் மட்டுமே பனிப்பாறை மெதுவாக உடைந்து வீழ்வதை பதிவு செய்ய முடியும். மிக மெல்ல நடக்கும் நிகழ்ச்சி இது. இதனால் அங்கு சுற்றுப்புறங்களில் வா

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

படம்
  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி! தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது.   எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகை

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!

படம்
  pixabay அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்

அலாஸ்காவில் தனியே வாழ்ந்த மனிதர்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, டிக் புரோனெக்கே அலாஸ்காவுக்கு வந்தார். அங்கு தனது கையால் தானே கேபின் போன்ற அளவில் வீட்டைக் கட்டினார். அதோடு இல்லாமல் அங்கேயே முப்பது ஆண்டுகளாக தங்கிவிட்டார். 50 வயதில் பார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் வேலையைக் கைவிட்டார்.  அலாஸ்காவின் இயற்கை அழகைப் பார்த்துவிட்டு இங்கேயே வந்து தங்கிவிட்டார். 1916ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐயோவாவில் பிறந்தவரின் தந்தை தச்சுவேலைகளை செய்பவர், அம்மா தோட்ட வேலைகளில் நிபுணர். இந்த இரண்டு அம்சங்களுமே அலாஸ்காவில் வீட்டைக் கட்டுவதற்கு டிம்முக்கு உதவியது. டிம்மின் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  பள்ளிக்கு பெற்றோர் ஆசையாக அனுப்பினாலும் இரண்டே ஆண்டுகளில் பள்ளி வேண்டாம் என்று திரும்பி வந்தவர், தங்களது பண்ணையில் வேலை செய்யத் தொடங்கினார். வேலை நேரம் போக ஹார்ட்லி டேவிட்சன் பைக்கை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு சென்று சுற்றிக்கொண்டிருப்பார். பியர்ல் துறைமுகம் தாக்குதலால் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்டார்.  பிறகு சான் பிரான்சிஸ்கோ வந்தவருக்கு உடல்நலம் கெட்டது. மருத்துவமனை சிகிச்சை முடித்

குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்

படம்
                  மார்ஷியல் யுனிவர்ஸ் சீன தொலைக்காட்சி தொடர் 42 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார் , உலகை காப்பாற்றினார் என்பதே கதை . இந்த தொடரின் முக்கியமான பலம் , லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும் , அபாரமான நடிப்பும் , சண்டையும்தான் . இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது . சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது . லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது . அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது . அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங் . நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான் . இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன் . அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்