இடுகைகள்

கரும்புதோட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரும்புத்தோட்டத்தில் மரணச்சத்தம் - அஹ்மத் சூரத்ஜி

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் அஹ்மத் சூரத்ஜி கேரளத்தில் இன்றும் பில்லி, சூனியம், ஏவல் சமாச்சாரங்கள் உண்டு. அதேபோல இந்தோனேஷியாவில் என்னாலும் முடியும் என்று தொடங்கி பல பெண்களை கொன்று சோதித்துப் பார்த்த கருப்பு மந்திரவாதி சூரத்ஜி. 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று கெம்லா தேவி என்ற பதினைந்து வயது சிறுமி, ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தார்.  எங்கம்மா போகணும் என்ற ரிக்சாக்காரரிடம் இடம் பற்றிச் சொல்லிவிட்டு, யாரிடம் இங்கு நான் செல்வதை சொல்லிவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த இடத்தில் பெரும் மர்மம் புதைந்திருப்பதை ரிக்சாக்காரர் உணரவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து நாளிதழில் செய்தியைப் பார்த்தவர் அதிர்ந்துபோனார்.கரும்புக்காட்டில் தன் வண்டியில் பயணித்த அந்த சிறுமி இறந்து கிடப்பதைப் பார்த்தார். அந்த சிறுமிதான் என்பதை உடை மூலம் உறுதி செய்துகொண்டவர், போலீசுக்கு தகவல் சொன்னார். தான் ஒரு வாரத்திற்கு முன்பு சூரத்ஜியின் வீடு அருகேதான் சிறுமியை இறக்கிவிட்டதாக ரிக்சாக்காரர் போலீசிடம் சொன்னார். உடனே போலீஸ் சாதாரண விசாரணையாக சூரத்ஜியிடம் சிறுமி பற்றி விசாரிக்க, தான்தான் கொலை செய்து எறிந்தேன் எ