இடுகைகள்

குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!

படம்
  நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை! கில் இட்  கொரிய டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி  ரஷ்யாவில் இருந்து கொரியா வரும் கூலிக்கொலைகாரன், ஆதரவற்ற குழந்தைகளின் உறுப்புகளை திருடி பணக்காரர்களுக்கு  வழங்கி வரும் குழுவை அறிந்து அதை அழிக்க முயல்வதே கதை. இப்படி செய்வதில் அவனுடைய கடந்த கால வரலாறும், பறிகொடுத்த அன்புக்குரிய உயிர்களும் உள்ளன.  நாயகன் கிம் சோ ஹியூனுக்கு அதிக வசனங்கள் இல்லை. அவனுக்கும் சேர்த்து அவனுடைய தோழி ஹியூன் ஜின் பேசிவிடுகிறாள். அவள் பேசாதபோது கிம்மின் துரோக நண்பன் பிலிப் அதை செய்கிறான். எனவே வசனம் இல்லையே என கவலைப்படவேண்டியதில்லை. பிலிப் தனது நண்பன் கிம்முக்கு செய்யும் துரோகம் சாதாரணமானதில்லை. கிம் காக்க நினைக்கும் அவனது தங்கை போன்ற சிறுமியை காசுக்காக கொல்ல காட்டிக்கொடுக்கிறான். ரஷ்யாவில் இருந்து கொரியாவுக்கு நாயகன் கிம் வருவதற்கு, அவனது வளர்ப்பு அப்பா வாங்கிக்கொண்ட சத்தியமும், அவர் துப்பாக்கிக் காயம் பட்டு இறந்துபோவதுமே முக்கிய காரணம். அதோடு, அவனது கடந்த கால வரலாறுக்கும் கொரியாவிற்கும் சம்பந்தம் உள்ளது.எனவே, அவன் கூலிக்கொ

வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!

படம்
  albert bandura குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர்.  டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள், டிவி தொட

மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி

படம்
  நோம்ஸ் சாம்ஸ்கி மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.  நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.  முக்கிய படைப்புகள்  1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்  1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ் 1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட் நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதில், பல ஆய்வாளர்களுக்கு வேறுபட

குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?

படம்
  ஆல்பெர்ட் பண்டுரா ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.  ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்.  ஆல்பெர்ட்

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். குழந்தை முன்பைப

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்

குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆராய்ச்சியை செய்த ஜீன் பியாஜெட்

படம்
  ஸ்விட்சர்லாந்தின் நியூசாடல் என்ற நகரில் பிறந்தார். இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். தனது பதினொன்று வயதில் தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கை எழுத தொடங்கிய மேதாவி. மனித குணங்கள், இயற்கை அறிவியல் பற்றிய பாடங்களை எடுத்து படித்தார். இருபத்தி இரண்டு வயதில் நியூசாடல் பல்கலையில் முனைவர் பட்டம் வென்றார். உளவியலில் ஆர்வம் வந்தது பிற்காலங்களில்தான். பிரான்சில் உளவியல் ஆய்வுகள் பற்றி படித்தார். 1921ஆம் ஆண்டு ஜீன் ஜாக்குயிஸ் ரூஸ்யூ என்ற ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்பில் சேர்ந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வைத்து குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தார். 1955ஆம் ஆண்டு, மனித அறிவு, குணங்கள் பற்றிய மையத்தை தொடங்கினார். இறக்கும் காலம் வரை அதன் தலைவராக இயங்கினார். உலகம் முழுக்க உள்ள கல்வி அமைப்புகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.  முக்கிய படைப்புகள் 1932 தி மாரல் ஜட்ஜ்மென்ட் ஆஃப் தி சைல்ட்  1951 தி சைக்காலஜி ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் 1952 தி ஒரிஜின்ஸ் ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் இன் சில்ட்ரன் 1962 தி சைக்காலஜி ஆஃப் தி சைல்ட் 

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவிய

சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!

படம்
  லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது.  எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின்  ஸ்டைரீன்  சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.  தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டிக்கும் கூட லீகோவிற்கு உத

அமெரிக்காவின் கல்விக்கொள்கையை மாற்றிய உளவியலாளரின் ஆராய்ச்சி!

படம்
  ஜெரோம் ப்ரூனர் போலந்து நாட்டு அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர் ஜெரோம் ப்ரூனர். பிறக்கும்போது இவருக்கு கண்பார்வை இல்லை. பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைத்தது. இரண்டு வயதில் பார்வை கிடைத்தவர், பனிரெண்டாவது வயதில் தனது தந்தையை புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். ஜெரோமின் அம்மா, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. ட்யூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்த ஜெரோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை முடித்தார்.  இரண்டாம் உலகப்போரின்போது ஜெரோம் அமெரிக்க அரசின் உளவுத்துறையில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு ஹார்வர்டில் அறிவாற்றல் சார்ந்த ஆய்வு நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிறகு, இங்கிலாந்திற்கு சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியவர், தொண்ணூறு வயதில் கூட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  முக்கிய படைப்புகள் 1960 the process of education  1966 studies in cognitive growth இருபதாம் நூற்றாண்டில் டெவலப்மென்டல் சைக்காலஜி துறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

படம்
  1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்த செயல்கள் எப்

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு

உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!

படம்
  இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர்.  குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும்.  ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  பால்டிமோரிலுள்ள ஹாப்க