இடுகைகள்

விவசாயி மானியம் -ரைத்து பந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிப்படை ஊதியம்(Ubi) தர இந்தியா தயாரா?

படம்
படம்: நியூஸ் கிளிக் தெலுங்கானாவில் மாநில அரசு அமல்படுத்திய ரைத்து பந்து திட்டம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு மீண்டும் அதிகாரத்தை தந்திருக்கிறது. இது இந்தியா, அடிப்படை ஊதியம் திட்டத்தை வறுமையில், வேலையின்மையில் தவிப்பவர்களுக்கு அமலாக்கலாமே என யோசிக்க வைத்துள்ளது. இது நிறையப்பேர் நினைப்பது போல விவசாயக்கடன் போல அரசுக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. ரைத்து பந்து திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு விவசாயி செய்யும் முதலீட்டுக்கு அரசு 4 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதே திட்டத்தை இந்தியா முழுக்க அரசு அமலாக்கினால் 3.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடலாம். 2011 யுனிசெஃப் செய்த ஆராய்ச்சிப்படி பெரியருக்கு 300, சிறுவர் ஒருவருக்கு நூற்றைம்பது என மாதம் முந்நூறு ரூபாய் கொடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்பது கணக்கு. இந்த தொகையை அதிகரித்தால் அரசு பிற நலத்திட்டங்களை கைவிட்டாக வேண்டிய சூழல் ஏற்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றலாமா என்பதிலும் நிறைய குழப்பம் நிலவுகிறது. சரியா, தவறா, அடிப்படை ஊதியத்திற்கு மாற்றா என்பதிலும் பொரு