இடுகைகள்

உடைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராணுவத்தினருக்கு காதி உடைகள்தான் இனி! - மேட் இன் இந்தியா முடிவு!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் தாண்டி இப்போதுதான் யோசிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது பருத்தி மற்றும் கலப்பின இழைகளால் ராணுவ உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் பத்து லட்சம் பேருக்கு காதி வகை உடைகள் தயாரித்து வழங்கப்படவிருக்கின்றன. உள்துறை அமைச்சரின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இந்தியாவிலுள்ள படைகளின் தலைமை காதி இயக்குநரை சந்தித்து பேசிவருகின்றனர். இதன்மூலம் காதியின் வளர்ச்சி  75 ஆயிரம் கோடியாக உயரும் என்கிறார் அதன் இயக்குநரான வினய் குமார் சக்சேனா. பருத்தியோடு கம்பளியையும் சேர்த்து உடைகளை நெய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இவற்றோடு உற்பத்தி துறைகளையும் அரசு பயன்படுத்திக்கொள்ள நினைத்தால் நாம் பிற நாடுளில் போர் தளவாடங்களைக் கூட நிறைய வாங்க வேண்டி இருக்காது. நன்றி - இடி

பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!

படம்
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம். எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல

பாலின பாகுபாடற்ற பள்ளி சாத்தியமா?

படம்
The Educator பாலின பாகுபாடற்ற சூழல் சாத்தியமா?  பாலின பாகுபாடற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொம்மைகள், உடைகள் உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. ஆண்களுக்கு ப்ளூ கலர், பெண்களுக்கு பிங்க் கலர் என பிரிக்கும் பாகுபாடு கூட இனி இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு கார், ரயில் பொம்மைகளும் பெண் குழந்தைகளுக்கு கரடி, பார்பி பொம்மைகளும் வாங்குவது கூட தற்போது குறைந்து வருகிறது. என்ன காரணம்? பாலின பாகுபாடு குறித்து உணர்வு பெற்றோர்களுக்கும் ஏற்பட்டதுதான். பாலின பேதமற்ற உடைகள் பாலின பாகுபாடற்ற கலாசாரத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கான பொம்மை, உடை என்பது தனித்தனியான தேர்வாக இருக்காது. பெண்குழந்தைகள் கிச்சன் செட் வைத்து விளையாடுவதும் கூட அவர்களின் தேர்வாகவே இருக்கும். மேற்குலகில் தொடங்கிய இந்த கலாசாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம், ஃபிளிப்கார்ட், தன்னுடைய வலைத்தளத்தில் பாலின பாகுபாடற்ற பொம்மைகளுக்கான ஃபில்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதுதான்.  இதனால் என்ன லாபம்? குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் உலக