இடுகைகள்

மாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

படம்
  சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம் சரீரம் நரன் சிறுகதைகள் சால்ட் பதிப்பகம் நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை   2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.   அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை. நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.   உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.   அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக   உள்ளே பார்

முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்

படம்
  பெருமாள் முருகன் மாயம் பெருமாள் முருகன் மாயம் - பெருமாள் முருகன் சிறுகதைகள்  காலச்சுவடு நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது.   மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன. பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது. காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெள