இடுகைகள்

கரண்மேனன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரண் மேனன்- அமெரிக்காவில் உருவாகிவரும் தனிக்குரல் கலைஞர்!

படம்
  கரண் மேனன் இந்தியாவில் அப்போது விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்பற்றி உலக நாடுகள் பலவும் உடனடியாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக கருத்துகள் உருவாகவில்லை. அப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் கரண் மேனன், விவசாயிகள் போராட்டம் பற்றி எளிமையாக வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவிட்டார். இதன்பிறகே பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் விஷயத்தை விளங்கிக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிடத் தொடங்கினார்.  அதற்கு எதிரான இந்திய பிரபலங்கள் எப்படி சமூகவலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நாளிதழ்களில், சமூக வலைத்தளங்களில் அனைவருமே படித்திருப்பீர்கள். நாம் போராட்டம் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. கரண் மேனன் பற்றித்தான் பேசப்போகிறோம்.  இவரது அப்பா கேரளத்தைச் சேர்ந்தவர். அம்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1980களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.  கரணுக்கு, வெப்சீரிஸ் ஒன்றில் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோதுதான், நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் அந்த வாய்ப்பு