இடுகைகள்

குற்றம் அறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரர்களுக்கான கலாசாரம், அறிகுறிகள், குணங்கள் !

படம்
                      சைக்கோ கொலைகாரர்களின் கலாசாரம் சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய அறிமுகத்தை நான் முன்னமே உங்களுக்கு அசுரகுலம் நூலில் தந்துவிட்டேன் . இந்த இரண்டாம் பாகத்தில் குற்றவாளிகளின் உருவாக்கம் , காலத்தின் பங்கு , அதைச்சார்ந்து இயங்கும் மனிதர்கள் , ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேசலாம் . ஹிட்லர் , முசோலினி ஆகியோர் கொடுங்கோலர்கள் , அவர்கள் குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைத் தூண்டினார்கள் , மக்களை அழித்தொழித்தார்கள் என்று ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன . அவை உண்மைதான் . அதேசமயம் அதற்கு தூண்டுதலாக இருந்த காலம் , நாட்டில் நிலவிய வறுமை , பொதுநலனை குலைத்த சுயநலம் , யார் மீது குற்றம்சாட்டுவது என பரிதவித்த மக்களின் மனநிலை ஆகியவையும் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கு காரணம் . வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களை மக்களேதான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்பது நகைமுரணாக தோன்றலாம் . ஆனால் ஜனநாயகம் இப்படித்தான் இயங்குகிறது . சீரியல் கொலைகாரர்கள் என்பது எப்போதும் ஊடகங்களுக்கு தனி கலாசாரம் போல , சுவாரசியமான விஷயமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது