இடுகைகள்

நர்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

படம்
            எழுத்தாளர் ஷீலா டாமி உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா? எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா? நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிக...

முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

படம்
  ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென   சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன   நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.   1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.   300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான். வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது   23 வயதில், முதல்கொலையைச் செய்தா...