இடுகைகள்

அளவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்களின் கால்களுக்கு அகலமான செருப்புகள்- புதிய காலணி அளவீடு பா

படம்
  புதிய காலணி அளவு பா - அவசியம் என்ன? இந்தியாவில் தற்போது செய்யப்படும் காலணிகளின் அளவுக்கு ஐரோப்பிய, இங்கிலாந்து நாட்டு அளவீடுகள்தான் பயன்படுகின்றன. அதை மாற்றும் விதமாக பா - பாரத் என்ற பெயரில் இந்தியர்களின் தனித்துவம் கொண்ட காலணி அளவீடு கொண்டு வரப்படவிருக்கிறது. இதற்காக தேசிய அளவிலான ஆய்வு நடைபெற்றது.  2021-22 என இரண்டு ஆண்டுகளில் 1,01,880 மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள எழுபது இடங்களில் உள்ள மக்களை இதற்காக தேர்ந்தெடுத்தனர். இந்தியர்களின் தோராய காலணி அளவைக் கண்டுபிடிக்க 3டி ஸ்கேனிங் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  ஆண்களுக்கு பதினொரு வயதிலும், பெண்களுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிலும் கால்களின் வளர்ச்சி கூடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 3டி ஸ்கேனர்கள் மூலம் கால் அளவு, அதன் வடிவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களை விட இந்தியர்களின் கால் அகலமாக உள்ளது. மேற்குநாடுகளின் காலணி அளவு, இந்தியர்களுக்கு குறுகலானதாகவே இருந்துள்ளது. இதை மாற்றினால் அவர்களுக்கு கால் அளவை விட சற்று தாராளமா...

பாரசிட்டமால் சிரப்பால் கல்லீரல் பாதிப்பு - தவறு எங்கே நடக்கிறது?

படம்
  பாரசிட்டமால் சிரப் ஓவர்டோஸால் கல்லீரல் பாதிக்கப்படும்  குழந்தைகள்- தவறு எங்கே நடக்கிறது? ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்துக்கடையில் பார்மாசிட்டமால் வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு போகும் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாரசிட்டமால் சிரப்பை காய்ச்சலுக்கு எடுத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லீரல் செயலிழந்து கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பெற்றோர் பலரும் பாரசிட்டமாலை   எந்த ஆபத்தும் இல்லாத மருந் து என நினைக்கின்றனர். உண்மையில் அது தவறானது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிரப், அவர்களின் உடல் எடை அடிப்படையிலானது. ஆனால், பாரசிட்டமால் மருந்து இந்தியாவில் நான்கு   விதமாக தன்மையில் விற்கப்படுகிறது. இதனால் சிரப் ஓவர்டோஸாக கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஆண்டுக்கு ஒருவரேனும் இறந்து போகிறார்கள். மீதியுள்ளவர்கள் அவசர சிகிச்சையில் வைக்கப்படுகிறார்கள்.   இதை எதிர்கொள்வது எப்படி? பாரசிட்டமால் சிரப்பைக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். இல்லையெ...

ஓவியர்கள் எப்படி மிகச்சிறப்பாக வரைகிறார்கள்- உளவியல் ஆய்வு

படம்
மிஸ்டர் ரோனி  சிலர் எப்படி பிறரை விட இயல்பாக நன்றாக வரைகிறார்கள்? காரணம் சூழலை அவர்கள் வேறுமாதிரி பார்ப்பதுதான். அவர்களின் பார்வையில் ஒருவரின் உருவத்தை அவர்கள் வரைவதற்கான விஷயங்களாக பார்க்கிறார்கள். டாவின்சியை விடுங்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ள ஓவியர் பி, தனக்கு லீவு வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் எனது உருவத்தை வரைந்து லீவு சொல்லி பீதியைக் கிளப்பினார்.  ஜாலியான பென்சில் ஸ்கெட்ச்தான். பிரமாதமாக உருவத்தை மனதில் பதித்து வரைந்திருந்தார். ஆனால் நான் அதே உருவத்தை வரைந்தால் என்னாகும்? பலமணிநேரம் பிடித்தாலும் அதே உருவத்தை என்னால் கொண்டுவரமுடியாது. பல உருவங்களுக்கும் போலியா கை, கால்களைத்தான் என்னால் வரைய முடியும். இதுபற்றி எப்போதும் போல வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி செய்திருப்பார்களே? அதைத்தான் தேடப்போகிறோம்.  ஓவியர்கள்  முதலில் பொருட்களின் அளவை தீர்மானிக்கிறார்கள். கேன்வாசின் சைஸூம் இதில் முக்கியம். பின்னர் தாங்கள் பார்த்த விஷயங்களை எப்படி நினைவு கொள்கிறார்கள் என்பதும் இதில் முக்கியம்.  எதை அவர்கள் தேர்ந்தெடுத்து வரைகிறார்கள் என்பத...