இடுகைகள்

ரிச்சர்ட் பிரான்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்

படம்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.  பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.  ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது
படம்
                    சூப்பர் பிஸினஸ்மேன் ரிச்சர்ட் பிரான்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த பிஸினஸ்மேனைப் பற்றி படித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது . ஆம் இவர் தனது பொருட்களை எப்பாடுபட்டாவது தானே விளம்பரப்படுத்திவிடுவார் . மார்க்கெட்டிங்கா எனக்கு வராதே சுண்டுவிரலைக் கடிக்கும் பழக்கம் இவருக்கு கிடையவே கிடையாது . ஆல்பம் ரெக்கார்டுகள் முதல் மொபைல்போன் , இணையசேவை நிறுவனங்கள் , ரயில் , குளிர்பானங்கள் , விமான நிறுவனம் என மொத்தம் 360 நிறுவனங்களை வைத்திருக்கிறார் . இதன் தோராய மதிப்பு 2.6 பில்லியன் வரும் . இங்கிலாந்தில் புகழ்பெற்ற வணிகர் இவர்தான் . இந்நேரம் இவரை யாரென்று யூகித்திருப்பீர்கள் . வர்ஜின் காலாடிக் என்ற பெயரில் மக்களை விண்வெளிக்கு கூட்டிச்செல்ல திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் ரிச்சர்ட் பிரான்சன்தான் அவர் . பெரும்பாலான இங்கிலாந்து பெருநிறுவன முதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் வேலை செய்யும் நிறுவன ஆட்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும் . ஆனால் ரிச்சர்டைப் பொறுத்தவரை உலகிலுள்ள அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும் . தெரிய வேண்டும் எ