இடுகைகள்

நாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உப்புச்சுவையை உணரும் நாக்கு - எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி நாக்கில் எந்த பகுதி உப்புச்சுவையை அறிகிறது? அனைத்து பகுதிகளுமேதான். சிலர் நாக்கில் குறிப்பிட்ட பகுதி உணவில் உள்ள சில சுவைகளை அறிகிறது என வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். போலிச்செய்திகள் என்பதை உருவாக்க இன்று ஏஐயைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும் அல்லவா? எனவே வதந்திகளை நம்பாதீர்கள். நாக்கில் குழுவாக, குறிப்பிட பகுதியில் சுவையை தனியாக உணரும் சுவை மொட்டுகள் ஏதுமில்லை. அறுசுவைகளை நாக்கில் உள்ள அனைத்து சுவை மொட்டுகளுமே அறிய முடியும். குறிப்பிட்ட பகுதியில் அந்த சுவை தெரிகிறது என நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் ஹல்லுசினேஷன்தான். உடனே சென்று டாக்டர் தசாவதாரத்தைப் பாருங்கள். 2 எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் ஆகியோர் ஒரே உயிரினத்திலிருந்து மனிதன், எலி, சி்ம்பன்சி ஆகியோர் உருவாகி பரிணாம வளர்ச்சிப்படி வளர்ந்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதர்களோடு எலி எழுபது தொடங்கி எண்பது மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கலாம் என ஆ...

பூதம் நீட்டிய நாக்கின் பெயர் - ட்ரோல்டுங்கா

படம்
  ட்ரோல்டுங்கா  பூதத்தின் நாக்கு! நார்வே நாட்டில், 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதி இது. இதனை அடையாளப்படுத்துவது  அந்தரத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பாறைத்துண்டு ஒன்று. ட்ரோல்டுங்கா (Trolltunga) என்பதற்கு, ஸ்வீடிஷ் மக்களின் மொழியில் பூதத்தின் நாக்கு என்று பொருள். நார்வே நாட்டின் தெற்குப்பகுதியில் ஏரியும் மலைப்பகுதியும் அமைந்துள்ளது. மேகமூட்டமான, ஈரப்பதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையே இங்கு காணப்படுகிறது.  பாறை அல்லது மலைத்திட்டில் நின்று கீழே பார்த்தால் அழகான காட்சிகள் தெரியும். ஆனால் அதற்கு நிறைய துணிச்சல் தேவை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடம் ட்ரோல்டுங்கா என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். தொன்மைக் காலத்தில், நார்வேயில் பனிப்பாறை நகர்ந்து வந்தது. அதிலிருந்து உருகிய நீர் பாறைகளின் பரப்பில் உறைந்தது. பின்னாளில், இவை ஏற்படுத்திய மாற்றங்களால் பாறைகள் உடைந்து ட்ரோல்டுங்கா மலைப்பகுதி உருவானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் உள்ள புற்கள், தாவரங்களை ரெய்ன்டீர் (Reindeer)எனும் கலைமான் இனத்தைச் சேர்ந்த விலங்கினம் உண்கிறது. ட்ரோல்டுங்கா பகுதியைப் பற்றிய ...