இடுகைகள்

ஹார்மோன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?

படம்
 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும்.  எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும்.  ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை  வாங்கிப்போட்டு

உண்மையை மறைக்காதபோது எதுவும் உங்களுக்கு சவாலாக இருக்காது - காஸ்டர் செமன்யா

படம்
  காஸ்டர் செமன்யா  விளையாட்டு வீரர் ரேஸ் டு பி மைசெல்ஃப் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளீர்கள். இதற்கான அவசியம் என்ன? நீங்கள் அமைதியான நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்ல வேண்டிய கதையை சொல்லவேண்டும். இந்த நேரத்தில் எனது ஆதரவு தேவைப்படுவோர்களுக்கு உதவுகிறேன். எனது கதை, வாய்ப்பு மறுக்கப்படுவோர்களுக்கானது. இதன் வழியே நீங்கள் யாரோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என நினைக்கிறேன்.  நீங்கள் வளரும்போது சிறந்த கால்பந்து வீரராக இருந்தீர்கள். அந்த விளையாட்டு புறவயமானது என்றும் எழுதுவது அகவயமானது என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது தேர்வாக அகவயமானதை தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? கால்பந்து விளையாடும்போது நீங்கள் தனியாக இருக்கமாட்டீர்கள். குழுவாக இருப்பீர்கள். அணியில் உருவாகும் பிரச்னைகளை குழுவாக அமர்ந்து தீர்க்க முயல்வீர்கள். சிலசமயங்களில் அவற்றை தீர்க்க முடியாமல் கூட போகலாம். ஆனால் தனிப்பட்ட வீர்ராக இயங்கும்போது வெற்றி, தோல்வி என்பது எனக்குமட்டுமே உண்டு. ஆனால் அப்படி இயங்கும்போது எனது மனதில் சுதந்திரத்தை உணர்கிறேன். எதற்கும் கவலைப்படுவதில்லை.  உங்கள் மனைவியை முதன்முதலாக வீரர்களி

உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? - அலசல்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பது என்பது, மிகப்பெரிய வணிக சேவையாக மாறிவிட்டது. உண்மையில் உடலின் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதாக என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என ஏராளமான நூல்கள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழில் பா.ராகவன் எழுதியுள்ள பேலியோ டயட் இந்த வகையில் முக்கியமான நூல். ஒருவரின் உடல் எடையைக் குறைப்பதில் அவரது மரபணுக்களுக்கு முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர் பா.ராகவன், தனது பேலியோ டயட் அனுபவங்களை குங்குமத்தில் தொடராக எழுதினார். அதுதான் பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலானது. பாராவுக்கு, பேலியோ டயட் வேலை செய்தது என்றால் அதேபோல இன்னொருவருக்கு அப்படியே அதே முறையில் வேலை செய்யும் என்று கூறமுடியாது. உடல் மிக சிக்கலான இயந்திரம். குறிப்பிட்ட காலத்திற்கு டயட் முறை வேலை செய்யும்தான். ஆனால் பிறகு உடல் மீண்டும் தனது இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். என்ன பிரச்னை? உடல் எடை குறைப்பதில் ஒருவரின் அடிவயிற்றுக் கொழுப்பு மட்டுமே கரைகிறது என மேலோட்டமாக புரிந்துகொள்வது தவறு. நம்மில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பது, உணவுப்பொருட்களை அதிகமாக சாப

பதில் சொல்லுங்க ப்ரோ! - தூக்க மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

படம்
  இல்லஸ்டிரேஷன் - டங்கா பாலமுருகன் பதில் சொல்லுங்க ப்ரோ? தூக்கமாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன? மென்மையான வேதிப்பொருட்களைக் கொண்ட தூக்க மாத்திரைகள் அனைத்திலும் ஆன்டிஹிஸ்டாமைன் சமாச்சாரங்கள் இருக்கும். இவை, நியூரோடிரான்ஸ்மீட்டரான ஹிஸ்டாமைன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறது. இதனால் உங்களுக்கு உடல் களைப்பானது போல தோன்றும். இந்த மாத்திரைகள், காபா எனும் மூளையில் தூக்கத்தை வரவைக்கும் ரிசெப்டருடன் இணைந்து வேலை செய்கின்றன.  குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது ஏன்?  புதிதாக பிறந்த குழந்தைகள் தினசரி 20 மணி நேரம் தூங்குவார்கள். பிறகு அவர்களின் வயது ஒன்றாகும்போது தூங்கும் நேரம் 11-12 மணிநேரம் என குறையும். இப்படி வெறித்தனமாக குழந்தைகள் தூங்குகிறார்களே சிலர் ஆச்சரியப்படுவார்கள், தூக்கம் வராதவர்கள் இதனை சற்றே டோன் மாற்றிக்கூட சொல்லுவார்கள். இதற்கு முக்கியமான அறிவியல் காரணம், குழந்தைகளின் மூளை மெல்ல உருவாகி மேம்பாடு அடைவதுதான். எனவே வயது வந்தவர்களை விட குழந்தைகள் அதிக நேரம் தூங்குகிறார்கள். இந்த தூக்கத்திற்கு ஆர்இஎம் தூக்கம் என்று பெயர். இதோடு உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களும் பொங்கிப் பெருகிப் பாய

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்கு அறிகுறிகளை மட்டும

விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

படம்
              ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரிய

சோயா பால் குடித்தால் ஹார்மோன் மாறுமா?

மிஸ்டர் ரோனி சோயாபீன்ஸ் பயன்படுத்தினால் பெண்களைப் போன்ற உடல் அமைப்பு ஆண்களுக்கு வருமா? பசுவிலிருந்து பெறும் பாலுக்கு மாற்றாக சோயா பாலை ஆரோக்கிய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சோயா பாலை அதிகம் பயன்படுத்தினால் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நாம் நினைப்பது போல பெண்களுக்கான மார்பகங்கள் ஆண்களுக்கு உருவாகி விடாது. உணவுதான் உடலை உருவாக்குகிறது. எனவே அது சோயா உணவுகளுக்கும் பொருந்தும். பிற உணவுகளை விட அதிக புரதம் கொண்டது சோயா. நாம் சாதாரணமாக சமைத்து சாப்பிடும் பீன்ஸ் எடமாமே என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இது முதிர்ச்சியடையாத பீன்ஸ். முதிர்ச்சி அடைந்த பீன்ஸ் மூலம்தான் டோபு, பால், சாஸ் உள்ளிட்டவை பெறப்படுகிறது. முதிர்ச்சியடைந்த பீன்ஸ் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பழமையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம். இன்று நவீன முறையில் பல படிமுறைகளைத் தவிர்த்துவிட்டு சந்தைக்காக வேகமாக தயாரிக்கின்றனர். இதனால் அவற்றில் சத்துகள் குறைவு. அடிப்படையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸிலுள்ள ஆன்டி ஆக்சிடன்களின் அளவு

கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது? புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது. ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நன்றி - பிபிசி

பயம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா?

படம்
பயப்படும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது? நாம் பிறந்த தில் இருந்து நம்மை அடையாளம் காட்டுவதாக இருப்பது ஒலிதான். அது அழுகையாக, வீறிடலாக முதலில் இருக்கிறது. பின்னர், அது சூழலைப் பொறுத்து மாறுபட்டு ஏற்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உடைந்து அழுவது கிடையாது. பெண்கள் அழாமல் இருக்க வைப்பது சிரமம். பொதுவாக அபாயத்தை பார்த்து ஏற்படும் அலறல் சத்தம் மூளையிலுள்ள அமிக்டலா பகுதியை உசுப்புகிறது. இதன் விளைவாக உடல் முழுக்க அந்த அபாயத்திலிருந்து தப்ப வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனை எப்படி உணர்வீர்கள்? பாம்பு, தேள் போன்ற கொல்லும் அல்லது கடுமையாக வலி ஏற்படுத்து உயிரிகளை அருகில் பார்த்தால் உடல் தன்னிச்சையாக தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஒரே விஷயம்தான் தோன்றும். அந்த இடத்திலிருந்து காயம்படாமல் நாம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அது. இப்போது உடலின் உறுப்புகளுக்குள் ஏற்படும் மாற்றம் பற்றி பார்ப்போம். கண்கள் கண் பார்வையின் திறன் கண்ணாடி போட்டிருந்தாலும் அதிக விழிப்பாக மாறும். உயிர் பிழைக்க வேண்டுமே? இதனால் நீங்கள் பார்க்காத கவனி

முத்தமிடத் தோன்றுகிறதா? பரிணாம வளர்ச்சியும் ஒரு காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முத்தம் கொடுப்பது எதற்கு? நான் இப்போதுதான் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு சடாரென விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுப்பதைப் பார்த்தேன். இதனை காமத்திற்கு தாம்பூலமாக பார்க்காமல் எப்படி முத்தம் பழகியிருக்கும் என்றால் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.  1915 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் முத்தம் மூலம் உணவைக் குட்டிகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து முத்தத்தை இதற்காகத்தான் வந்திருக்கும் என்று கூறினர். இந்திய புராணமான மகாபாரதத்தில் முத்தம் வந்திருப்பதாக டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்  ஏஅண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். கிஸ் என்ற ஆங்கில வார்த்தை கஸ் (KUS)  என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வேதமொழி எழுத்துகளில் இதனை ஒருவரின் ஆன்மாவை இன்னொருவர் சுவாசிப்பது என்று கூறுகின்றனர். உலகம் முழுக்க அலைந்து திரிந்த அலெக்சாண்டர் தன் படையுடன் இந்தியாவுக்கு வந்து, முத்த த்தை உலகம் முழுக்க எடுத்துச்சென்றிருக்க வாய்ப்புண்டு. ரோம் மக்கள் கைகள், கன்னம், உதடுகள் ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளின் போது அன்பை வெளிக்காட்ட முத்தமிட்டனர் எ

காதல் என்பது வேதிவினைகளின் விளைவா?

படம்
காதல் என்பது வெறும் வேதிவினைகளின் விளைவா? ஆபீஸ் கூட்டும் கனகாவை, செக்யூரிட்டி சகோ வெற்றிவேல் கண்ண்டிப்பது அனைத்திற்கும் காரணம் உண்டு. காதல் உணர்வை தூண்டுவதில் உடலில் ஹார்மோன் சதிகளும் உண்டு. மூளையில் ஹைப்போதாலமசில் உள்ள ஆக்சிடோசின், வாசோபிரெசின் ஆகிய ஹார்மோன்கள் காதலை தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உங்களுடைய தாத்தா, பெற்றோர் அன்பு பாராட்டாமல் தாம்பத்தியம் செய்து உங்களைப் பெற்றிருப்பார்களா என்ன? வேதிப்பொருட்களின் கலப்பு என்பது உடலின் உணர்ச்சிகளுக்கு அடிப்படை. ஆக்சிடோசின் சுரந்தால்தான் நீங்கள் பீனிக்ஸ் மால், அல்லது எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உங்கள் கேர்ள் பிரெண்டுக்காக தியேட்டர் டிக்கெட் வாங்கி கார்னர் சீட் போட்டு காத்திருப்பீர்க்கள். அதற்கான அன்பை விதைப்பது இந்த ஹார்மோன்தான். இந்த காரணத்தினால்தான் இப்போது சென்ட் விற்கும் கம்பெனிகள் ஆக்சிடோசினை சென்டில் கலந்து விற்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இது அளவில் குறைவு. காதலில் உங்களை விழச்செய்வது பரிணாமவளர்ச்சி, மனிதர்கள் பிழைத்திருப்பதற்கான வழி. பிற விலங்குகளுக்கு இருப்பதுபோல குறிப்பிட்ட காதல் பருவம் மனிதர்களுக்கு கிடையாது.

காதல் வந்தால் உடலுக்கு என்னாகிறது?

படம்
maureen mayieka  /pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி காதலில் விழுந்தால் என்னாகிறது உடல்? சூரியன் பனியாவதும், பனி எரிமலையாகத் தோன்றுவதும் நிகழ்வது இந்த உணர்ச்சியில்தான். காதலைத் தடுக்கும் குடும்பங்கள் எம கிங்கரர்களாக மாறுவதும் இதையொட்டித்தான். சமூகத்தை விடுங்கள். நம் உடலில் என்ன மாற்றங்களைக் காணலாம். ரத்தத்தில் காதல் நினைவுகள் கலந்தால் புரதம் விறுவிறுவென ஏறுகிறதா? மூளையின் நியூரான்கள் ஓவர் டூட்டி பார்ப்பதும் காதல் டைமில்தான்.  காதல் சமயத்தில் டோபமைன் மற்றும் ஆக்சிடோசின் சுரப்பதால் உடலில் கோகைன் அடித்தது போன்ற போதை ஏற்படும். வெட்கமின்றி சிரிப்பது இப்படித்தான் நிகழ்கிறது. Michelle Jacokes \pinterest மூளையில் சுரக்கும் வாசௌபிரசின் ஹார்மோன், உங்கள் காதலி மீது அதிகப்படியான காதலை ஏற்படுத்தும். எப்படி? அவர் தன் கல்லூரியிலுள்ள ஆண் தோழர் கூட பேசினால் கூட உங்களுக்கு ரத்தம் அழுத்தம் கிறுகிறு வென ஏறும். கூடவே காதலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வேகத்தை செரடோனின்,  நோர்பைன்பிரைன் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு தரும்.  suziuu \pinterest காதலில் விழுந்தால்,

சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி ஏன்?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி வளருவது ஏன்? நடிகர் கவுண்டமணியின் உடலைப் பார்த்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உடலின் முடிவளர்ச்சிக்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. நம் முன்னோர்களை நினைவுப்படுத்திக்கொண்டால் முடிவளர்ச்சிக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடுவீர்கள். அதேசமயம் காகசியன் மக்களுக்கும், ஜப்பான் மக்களுக்கும் உடலில் ஒரே அளவு டெஸ்டோஸ்ட்ரோன் சுரந்தாலும் இருவரின் உடலில் வளரும் ரோம வளர்ச்சி அளவு பெருமளவு மாறுபடுகிறது.  இதற்கு என்ன காரணம் என வருங்கால ஆராய்ச்சிகள்தான் சொல்ல வேண்டும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

காதல் காமம் 2

படம்
SF ஒருமுறை பார்த்தாலே காதல் வரும் என்பது உண்மையா? இதுமாதிரி மேஜிக் எல்லாம் நடப்பது இயல்புதான். இயல்பாகவே நாம் ஒருவரைப் பார்க்கிறோம். ஏதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. நட்பாகிறோம் இல்லை, பரிசல் கிருஷ்ணா சிறுகதை போல நீ ரொம்ப ஸ்பெஷல்டா என கொஞ்சுகிறோம் ஏதாவது நடந்தால்தானே வீக்எண்டிற்கு பிளான் செய்ய முடியும்.  சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சோதித்தனர். கறுப்பு வெள்ளை புகைப்படங்களை நிறையப்பேரிடம் கொடுத்தனர். அவர்களின் கண்களின் அசைவு எப்படி இருக்கிறது? படங்களில் எந்த உறுப்புகளை கவனிக்கின்றனர் என சோதித்தனர். அவர்கள் தமக்கு பிடித்த படங்கள் என்று கூறிய படங்களில் அவர்களின் கண்களின் முகம், கைகால் என எக்ஸ்ரே போல மேய்ந்தன. ஆண், பெண் பேதம் எல்லாம் செக்ஸ், காதலுக்கு கிடையாது. பெஸ்ட் நமக்குத்தான் கிடைக்கணும் என்கிற வெறிதான் இதற்கு காரணம்.  மனிதர்களுக்கு செக்ஸ் என்பதற்கு ஏன் சீசன் கிடையாது? நாய், பூனை, சிம்பன்சி என அனைத்துக்கும் காதல் செய்ய கட்டிப்புரள நேரமுண்டு. ஆனால் மனிதர்களுக்கு ஏன் இருபத்திநான்கு மணிநேர சேவையை ஆண்டவன் விதித்தார்?  காரணம் விலங்குகளின் இ