இடுகைகள்

நாஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்

படம்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் விக்டர் ஃபிராங்கல் உளவியல் நூல்  ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.  நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.  நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம்

போர், பாலியல் சீண்டல், வன்முறையால் குழந்தைகளுக்கு நேரும் உளவியல் குறைபாடுகள்!

படம்
  பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்டியக்ஸ் நகரில் போரிஸ் சைருல்னிக் பிறந்தார். இரண்டாம் உலகப்போருக்கு சிறிது முன்னதாக பிறந்தார். இவரது பெற்றோர் வாழ்ந்த பகுதியின் ஆட்சி வேறு ஒரு குழுவிற்கு மாறியதால், அவர்கள் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். இதனால் யூதராக போரிஸின் வீடு சோதனை செய்யப்பட்டு யூதரான பெற்றோர் ஆஷ்விட்சிலுள்ள வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை மட்டும் பாதுகாப்பாக வளர்க்க ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களோ சிறியளவு தொகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். சிறுவனான போரிஸ் விரைவில் வதைமுகாமுக்கு மாற்றப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக மாறினார். தன்னைத்தானே பராமரித்துக்கொண்டு கல்வியை தானாகவே கற்றுக்கொண்டார். உறவுகளே இன்றி வளர்ந்தவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். தன்னுடைய வாழ்க்கையை ஆய்வு செய்ய நினைத்தவர், உளப்பகுப்பாய்வு, நியூரோசைக்கியாட்ரி ஆகியவற்றை கற்றார். தனது வாழ்வு முழுவதும் மோசமான விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவிட்டார

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர

ஜனவரி 10 - திரைப்பட விரும்பிகளுக்கான தினம்

படம்
சில படங்கள் வெளியாகும் போது அதன் தனித்துவம் தெரியும். அவை அப்போது வணிகரீதியாக வெற்றி பெறலாம். அல்லது தோற்றுப்போகலாம். ஆனால் அதனை காண்பவர்கள் மனதில் தனித்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனைப் பற்றி நண்பர் ஒருவர் சொன்னார். படத்தை நிறைய விஷயங்களை வைத்து அடர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். எனவே அதனை பலமுறை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் அதிலுள்ள விஷயங்களை உள்வாங்க முடிகிறது என்றார். அப்படி ஜெர்மன் மொழியில் வந்த படம்தான் மெட்ரோபோலிஸ். அறிவியல் படங்களில் கிளாசிக் என திரைப்பட காதலர்களால் கொண்டாடப்படும் படம் இது. அமைதிப்பட காலத்தில் 2026இல் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டது. இதனை திரைக்கதை எழுதி உருவாக்கியவர்கள் ஃபிரிட்ஸ் லாங், அவரது மனைவி தியா வான் ஹார்பியூ. படம் நிறைய விஷயங்களால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் பிடித்த படமாக இல்லை. படத்தைப் பார்த்தவர்கள் பலரும் பீதியடைந்தவர்களாக திரையரங்கை விட்டு வெளியேறினார்கள். படத்தைப் பார்த்து வியந்து வசீகரிக்கப்பட்டவர்களின் ஹிட்லரின் சகாவான கோயபல்சும் ஒருவர். படத்தில் காட்டப்பட்ட இடங்களைப் பார்த்தவர். திரைப்பட இயக்குநர்

நூல்களை தடை செய்வது என்றால் நாம் நாஜி ஜெர்மனி திசையில் நகர்கிறோம் என்று அர்த்தம்! - வினய் லால், பேராசிரியர்

படம்
  பேராசிரியர் வினய் லால் வினய்லால்  பேராசிரியர், வரலாற்றுத்துறை கலிபோர்னியா பல்கலைக்கழகம் சங் பரிவார் அமைப்புகள் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர் என்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். என்சிஇஆர்டி யில் கூட பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏன் இதனை யாருமே பெரியளவு எதிர்க்கவில்லை? இதை கொஞ்சம் விரிவான பார்வையில் பார்க்க வேண்டும். வரலாற்றை திருத்தி மாற்றி எழுவது புதிதான விஷயமல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் காலம்தோறும் செய்து வரும் விஷயம்தான் இது. உலகம் முழுக்க நடைபெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என நினைத்து அதிர்ச்சியாகவேண்டாம். நான் இதைப்பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  2003இல் எழுதிய தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி பாலிடிக்ஸ் அண்ட் ஸ்காலர்ஷிப் இன் மாடர்ன் இந்தியா வரலாற்றை எழுதுவதில் உள்ள அரசியலைப் பற்றியது இந்த நூல்.  உலக நாடுகளில் உள்ள வரலாற்றுப் பாடல் என்பது எப்போது விவாத த்திற்குரியதாகவே இருந்து வருகிறது. இது நாம் சிந்திக்கும் முறையில் உள்ள பிரச்னை. இந்திய பத்திரிகையாளர்கள், உலகின் பிற பகுதிகளில் உள்ள வ

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத

பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட பெண் செயல்பாட்டாளர்கள்!

படம்
            மாற்றங்களை ஏற்படுத்திய பெண்கள் இளவரசி இசபெல் - பிரேசில் இரண்டாம் பெட்ரோ மன்னரின் மகள்தான் இசபெல் . தந்தை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது இசபெல் , தங்க சட்டம் என்பதை கொண்டு வந்தார் . இதன்மூலம் பிரேசில் நாட்டில் அடிமை முறையை ஒழித்தார் . இது அடிமை வியாபாரிகளையும் , செல்வந்தர்களையும் கோபப்படுத்தியது . இதனால் இவர்கள் ஒன்றாக சேர்ந்த அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்றும் கலகத்தை தொடங்கினர் . கலகம் தொடங்கியதால் பிரான்சிற்கு சென்ற இளவரசி இசபெல் , தனது 30 ஆண்டுகளை வெளிநாட்டில் செலவழித்தார் . ஹெலன் கெல்லர் பார்வை , பேச்சுத்திறன் , செவித்திறன் இல்லாதவர் . பிரெய்லி முறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற சாதனையாளர் . சைகை முறையில் பிறருடன் உரையாடினார் . பிரெய்லி முறையில் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார் . ஹெலன் கெல்லர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது . ரேச்சல் கார்சன் இன்றைய சூழலியல் போராட்டங்களுக்கான முன்னோடி . கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சிகளை திறம்பட செய்தவர் . 1962 ஆம் ஆண்ட

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்

கடல் தங்கத்தை மீட்கிறாரா ப்ரூனோ பிரேசில் - லயன்காமிக்ஸ்

படம்
சாக மறந்த சுறா லயன் காமிக்ஸ் ரூ.60 ஓவியர் - வில்லியன் வான்ஸ் - கதை க்ரெக் ப்ரூனோ பிரேசில் அதிரடிக்கும் கதை. அட்டைப்படத்தில் ஹீலியம் பலூன் அதிலிருந்து இறங்குவது போன்ற படம் இருந்தாலும் கதையில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் இல்லை. நாஜி ஜெர்மனி போரில் ஈடுபட்ட காலத்திற்கு கதை செல்கிறது. போரில் ஈடுபட்ட கப்பல் ஒன்று தங்கத்துடன் கடலில் குறிப்பிட்ட இடத்தில் கவிழ்ந்துவிடுகிறது.அதில் நாஜிப்படையினர், பெட்டி பெட்டியாக தங்கத்தை வைத்திருக்கின்றனர். அது பற்றி செய்தியை ஒருவர் கசியவிட உலகநாடுகள் அனைத்தும் உளவுத்துறையை உசுப்புகின்றன. கடலில் கிடக்கும் தங்கத்தை எடுக்கும் முயற்சிகள்தான் கதை. அமெரிக்காவில் நடக்கும் கார் விபத்து இதற்கு தூண்டுதலாகிறது. விபத்தில் காரில் பயணிக்கும் இருவர் பேருந்தோடு மோதி அங்கேயே இறந்து விடுகின்றனர். அதில் தப்பிப்பவர் முன்னாள் நாஜி தளபதி. இதுபோதாதா ப்ரூனோ பிரேசில் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய? கதை தொடங்குகிறது. அங்கு உள்ள உளவுத்துறையினர் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டு ஆட்களை போட்டுத்தள்ளத் தொடங்குகின்றனர். அதில் முதல் முயற்சியில் தப்பிக்கும் ப்ரூனோ பிரேசில்,

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

நாஜி படைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி தி ஹன்ட் மனைவியைப் பிரிந்து வாழும் நர்சரி ஆசிரியரான லூகாஸூக்கு ஒரு மகன் உண்டு . லூகாஸின் நெருங்கிய நண்பரான தியோவின் மகள் கிளாரா படிப்பதும் லூகாஸின் பள்ளியில்தான் . ஆசிரியர் , மாணவி என்பதைக் கடந்த நட்பு கிளாராவுக்கும் லூயிஸூக்கும் உருவாகிறது . ஒரு நாள் கிளாரா வீட்டில் இருக்கும்போது அவளுடைய அண்ணனும் , அவனின் நண்பனும் விளையாட்டாக ஐபேடிலுள்ள ஆபாசப் படத்தை கிளாராவுக்கு காட்டுகிறார்கள் . அடுத்த நாள் கிளாரா , பள்ளி முடிந்தும் வீட்டுக்குப் போகாமல் வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறாள் . ஆசிரியர் லூகாஸ் தன்னிடம் தவறாக நடந்துவிட்டதாக பள்ளி முதல்வரிடம் பொய்க்குற்றம் சாட்டுகிறாள் . கிளாராவைத் துருவி விசாரிக்கும் பள்ளி நிர்வாகம் , அவள் சொல்வது உண்மை என நம்பி , லூகாஸை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள் . லூகாஸ் தன் மீது விழுந்த பழிச்சொல்லை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘ தி ஹன்ட் .’ திரைப்படம் . சர் நிக்கோலஸ் வின்டன் சில முன் டி . வி சேனலில் சிறப்பு விருந்தினராக முதியவர் அழைக்கப்பட்டிருந்தார் . அவர் மேடைக்கு வந்ததும் , பார்வையாளர்களின் எழுந்து நின்று