இடுகைகள்

மரண தண்டனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரண தண்டனை கைதிகளுக்கு உதவும் வழக்குரைஞர்! அனுப் சுரேந்திரநாத்

படம்
  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் இந்தியா போன்ற பல்வேறு கலாசாரம், பண்பாடு கொண்ட நாட்டை ஒழுங்குபடுத்துவது சாதாரண காரியமல்ல. இதைத்தான் பல்வேறு முன்மாதிரிகளை கொண்டு பி ஆர் அம்பேத்கர் சாத்தியப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார். இதன் வழியாகவே எது குற்றம் என்பதையும், உரிமைகள் என்னென்ன என்பதையும் அறிய முடிகிறது.  மாநில, மத்திய அரசுகளைப் பொறுத்தவரை சட்டம், வழக்கு என்பதெல்லாம் மக்களுக்குத்தான். தங்களுக்கும் தங்கள் அதிகாரத்திற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்களை நீதிமன்றத்தால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரமுடிவதில்லை.  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் அனுப் சுரேந்திரநாத் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் சட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் போதுமான  வேகத்தில் செயல்படுவது இல்லை. இதற்கு பல்வேறு அரசியல், சூழல் காரணங்கள் உண்டு. இதன் நேரடி பாதிப்பாக, சிறையில் 70 சதவீத த்திற்கும் அதிகமான கைதிகள் விசாரணை கைதிகளாகவே சிறைபட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டு வர வழக்கு முடிவ

மரணதண்டனை எனும் சித்திரவதை- காம்யூ சொல்வது என்ன?

மரணதண்டனை என்றொரு குற்றம் ஆல்பெர் காம்யூ தமிழில் வி நடராஜ் பரிசல் ரூ.30 இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் மரணதண்டனை வழங்கப்பட்டுவருகிறது. இது அரிதாகவே நடக்கிறது என்றாலும் மரணதண்டனை பொதுமக்களின் கோபம் போக்க எனும் முகமூடியில் இந்த கொடூரம் நடைபெற்று வருகிறது. ஆல்பெர் காம்யூ பிரெஞ்சு நாடு, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கில்லட்டின் மூலம் நடைபெற்ற நிர்வாக முறை சார்ந்த மரணதண்டனைகளைப் பற்றி பேசி அது கூடாது என்று கூறுகிறார். நிறைய வாக்கியங்கள் நான்கு வரி சென்றாலும் முற்றுப்புள்ளியைக் காணோம். அது பரவாயில்லை. விஷயம் புரிந்துகொண்டால் போதும் என்பதால் வாசகர்கள் அதுகுறித்து கவலைப்பட மாட்டார்கள். 1930 களில் அமெரிக்காவில் நடந்த ஆய்வுகளில் மரணதண்டனையைக் கைவிட்ட நாடுகளில் குற்றம் என்பது பெரிதாக குறையவில்லை என்ற ஆய்வையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அதேநேரம், குற்றத்திற்கான தண்டனையை நினைத்து குற்றவாளிகள் எதையும் செய்யாமலும் இருக்கப்போவதில்லை எனபதையும் ஆசிரியர் கூறுகிறார். சமூகத்தின் போலி ஒழுக்கம் மரணதண்டனையை வலியுறுத்துகிறது என்கிற இவரது வாதம் மிக கூர்மையானது. காரணத்தை அழி

இரான் சிறையில் சூழலியலாளர்கள்

படம்
இரானைச் சேர்ந்த எட்டு சூழலியலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஊழல் புகார்களின் பேரில் கைதானவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.  ஊழல் புகாரின்படி ஒருவருக்கு மரணதண்டனைகூட விதிக்கலாம் என்ற சட்ட விதிதான் பயமுறுத்துகிறது. நிலோஃபர் பயானி, சாம் ராட்ஜபி, ஹவ்மன் ஜோகர், தாஹெர் காட்ரியான், மொராத் தபாஸ், செபைடெ கசானி, அமிர் ஹோசைன் கலேகி, அப்டோல்ரெஸா கௌபயெ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெர்சியன் வைல்டுலைஃப் ஹெரிடேஜ் பவுண்டேஷனில் பணியாற்றி வந்தவர்கள். கடந்த ஆண்டு ஊழல் புகாரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சயீத் இமானி பிப். 2008 ஆம் ஆண்டு சிறையில் இறந்துபோனார்.  ஆசிய சீட்டா புலியைக் காக்கும் முயற்சிக்காகத்தான் இரான் அரசு இப்படி இவர்கள் மீது பாய்ந்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் இரான், கனடா, அமெரிக்காவில் படித்தவர்கள். மேலும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளில் பங்கு பெற்றவர்கள், உறவுகளை வைத்திருப்பவர்கள். அரசு திட்டமிட்டு இயற்கையியலாளர்களை தண்டிப்பதின் மூலம் மனித உரிமையாளர்களை மிரட்ட நினைக்கிறது.