கதை கேட்கிறதுக்கென ஒரு மனுசன்!
கதை சொல்லப்போறோம்! வேலைக்கு எடுக்கும்போது கூட கேட்டார்கள். கதை, கவிதை எல்லாம் எழுதுவீர்களா? உடனே நேர்மையின் எவரெஸ்டாய், கட்டுரைகளை நேர்த்தியாக எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார் என்று சொல்லி விட்டேன். ஆனால் அதற்கப்புறம் கேட்டதெல்லாம் என்னுடைய வருங்கால உயரதிகாரியின் வாழ்க்கைக் கதை, அதோடு நான் எப்படி தங்கப்பதக்கம் சிவாஜியாய் நேர்மையாக எப்படி இருக்கவேண்டும் என்கிற கதைகள்தான். என் பச்சை மூஞ்சிதான் காரணமா என தெரியவில்லை. பேசிய பத்தாவது நிமிடம் தன் கதைகளை சொல்லி ஆறுதலை கேட்கிறார்கள். மே ஐ ஹெல்ப் யூ என ஒரு அப்பாவி பதவி வங்கியில் இருக்கும். அதே விஷயத்திற்கு முழு மனிதன் பிறந்திருக்கிறான் என்றால் அதற்கு பக்கத்தில் சமம் போட்டு என் பெயரைத்தான் எழுதவேண்டும். வின்சென்டின் மணி என்னப்பா கதைக்கு பிறகு, காலையில் பேப்பர் வாங்க போகும்போது முதல் ஆளாக ஆயா ஒருவர் மணி என்னப்பா என கேட்டுவிடுகிறார். சாபம் அப்படியே தொடருகிறதா என நினைத்தேன். நேற்றிரவு நிகழ்ச்சி அதனை உறுதி செய்தது. நேற்று இரவில் வண்டி ஏற நின்று கொண்டிருந்தேன். நான்கு பேர் டாஸ்மாக் போதையில் தள்ளாடி வந்தார்கள். ஒதுங்கினேன். தி