இடுகைகள்

வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக

25 ஆண்டுகளாக மறக்கமுடியாத இனவெறி கொலை - கல்லறையை சேதப்படுத்தி வரும் வெள்ளையின இனவெறியர்கள்

படம்
  ஜேம்ஸ் பைர்ட் ஜேம்ஸ் பைர்டின் கல்லறை டெக்ஸாஸில் பெருகும் இனவெறி- மறக்க முடியாத இனவெறி கொலை 1998ஆம் ஆண்டு. ஜேம்ஸ் பைர்ட் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு ஜாஸ்பர் கவுன்டிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று வெள்ளையினத்தவர்கள் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி ஏறியவரை அடித்து உதைத்து இரும்புச்சங்கிலியில் கைகளைக் கட்டி, பிக் அப் டிரக்கோடு பிணைத்து சாலையில் இழுத்து சென்றனர். மூன்று கி..மீ. தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பைர்டின் எலும்புகளை அடுத்தநாள் காவல்துறை வந்து பொறுக்க வேண்டியிருந்தது. உயிர் போனதோடு, அவமானகரமான இறப்பு. அவரை அடித்துக்கொன்ற வெள்ளையர்கள் வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள். விவகாரம் தேசிய அளவில் பேசப்பட வேறுவழி இல்லாமல் ஜேம்ஸ் பைர்ட்டைக் கொன்ற குற்றவாளிகளில் இருவருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு ஆயுள் சிறை கிடைத்தது. அவரது பெயரில் இனவெறுப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனாலும் கூட ஜேம்ஸ் பைர்ட் இன்று வரையில் நிம்மதியாக இல்லை. அவரது கல்லறை இருமுறை வெள்ளை இனவெறியர்களால்

அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்

படம்
  இந்திய அஞ்சல்தலை சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு! எழுபத்தைந்தாவது விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது, வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து விடுதலை போராட்ட வீரர்களை   கண்டறிய முயன்றது. இந்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல் தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம் எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள்ளூர் கலை

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பா

தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி

படம்
  எழுத்தாளர் ஏஞ்சலா சைனி ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்?   விவசாயம் செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா, அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார். பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார். மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டிய காரணங்கள் என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.    எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய முழுமையான

வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

படம்
  வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள் வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்   நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்   என வசதிகள் நிறைந்த அறை அது. சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா? நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வரு

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையும், கலாசாரமும்!

படம்
  பிடிஎஸ்எம் முறையைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பிடித்தால் அவர்கள் கம்யூன் போல வாழும் குழுக்களோடு சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையத்தில் இப்படி இயங்குபவர்கள் ஏராளமான ஆட்கள் உண்டு. எந்த உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. அந்த நம்பிக்கையை யார் மீது வைக்கிறீர்கள் என்பது தனிநபர்களைப் பொறுத்தது. தவறான தகுதியில்லாத நபர்கள் மீது அன்பை செலுத்தி திரும்ப அன்பு கிடைக்காதபோது யாருக்குமே விரக்தியாகும். பிடிஎஸ்எம் முறையிலும் இந்த ஆபத்து உண்டு. எனவே நீங்கள் ஒருவரை நம்பினால் பிடிஎஸ்எம் முறையை பின்பற்றுங்கள். இல்லாதபோது அது சுரண்டல் என்பதாகவே மனதில் கருத்து உருவாகும். ஒருவர் நம்பும் கலாசாரப்படி பிடிஎஸ்எம் முறை இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இந்த முறையை நீங்கள் கையாள்கிறீர்கள், கடைபிடிக்கிறீர்கள் என்றால் முழுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது அவசியம். அப்படியல்லாதபோது பிரச்னை ஏற்படவே வாய்ப்பபு அதிகம். இன்றைக்கு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்வது, தன்னை குறிப்பிட்ட பாலினமாக வெளிப்படுத்துவது என்பது

தங்க கண்களைக் கொண்டு காணாமல் போன தாத்தாவின் வரலாற்றைத் தேடும் பேரன் - கோல்டன் ஐஸ் - சீன டிவி தொடர்

படம்
  கோல்டன் ஐஸ் சீன டிவி தொடர் புனைவு, வரலாறு ராக்குட்டன் விக்கி 56 எபிசோடுகள் பெய்ஜிங் நகரில் உள்ள தொன்மை பொருட்கள் அடகுக் கடையில் ஜூவாங் ருய் வேலை செய்து வருகிறான்.  பெற்றோர்கள் இல்லை. சைக்கிளில் செல்வது, சமூக வலைத்தளத்தில் நண்பர்களுடன் சென்ற பார்ட்டிகளை பதிவிடுவது என அவனது வாழ்க்கையே அவ்வளவுதான். ஒருநாள் அவனது நண்பன் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீட்டுக்குப் போகாமல்  அடகுக்கடைக்கு ஏதோ பொருளை எடுப்பதற்காக வருகிறான். அந்த நேரத்தில் அவசரமாக வந்ததாலும் மது போதையிலும் கதை மூடாமல் உள்ளே வந்துவிடுகிறான். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளே புகுகிறது. அவர்கள் அங்கு ஒரு தொன்மையான பொருளை திருட வந்திருக்கிறார்கள். ஆனால் ஹூவாய் ருய் செய்த முட்டாள்தனமான காரியத்தால் பல்வேறு பொருட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு நொறுங்குகின்றன. அதில் தொன்மைப் பொருளின் சிறுபகுதி அவனின் கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு, காவல்துறை அந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரிக்கும் பெண் அதிகாரி ஃபெய்பெய் ஹூவாங் ருய்தான் திருட்டு கும்பலுக்கு உதவி செய்தானோ என்ற ரீதியில் விசாரிக்கிறார். இந்த

பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

படம்
  டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர்  கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார்.  13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது.  2 கிளாடியஸ் டோலமி பூமி என்ன வடிவில் இருக்கிறது என்பது

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா

டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்ட வரலாறு! - உண்மையா, உடான்ஸா

படம்
ஆர்மாடில்லோ என்ற விலங்கின் ஓட்டை, துப்பாக்கித் தோட்டா கூட துளைக்காது!  உண்மையல்ல. சிலர், அதனை உயர்த்திக் கூற தோட்டா கூட துளைக்க முடியாது என கூறியிருப்பார்கள். ஆர்மாடில்லோ என்ற பாலூட்டி விலங்கின் ஓடு, கடினமானது தான். இதன் ஓடு, ஆஸ்டியோடெர்ம்ஸ் (Osteoderms) என்ற வேதிப்பொருளால் உருவாகிறது.  ஆர்மாடில்லோ, எறும்புகள், கரையான்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது.  ஸ்காட்லாந்தின் பனியைக் குறிப்பிட நிறைய வார்த்தைகள் உண்டு! உண்மை. அந்நாட்டில் பனியைக் குறிப்பிட மொத்தம் 421 வார்த்தைகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்ப்போம். ஸ்னீஸ்ல் (sneesl), ஃபீஃபில் (feefle), ஃபிலின்க்டிரின்கின் (flinkdrinkin).  ஆக்டோபஸ் ஒரு முறையில் 56 ஆயிரம் முட்டைகளை இடும்! உண்மை. தோராயமாக பசிஃபிக் ஆக்டோபஸ்  கருவுற்று 56 ஆயிரம் முட்டைகளை இடுகிறது. முட்டைகள் நீரின் தன்மையால் அதன் தாயிடமிருந்து பிரிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போதும், தாய் ஆக்டோபஸ் முட்டைகளை தன்னை விட்டு பிரியாமல் பார்த்துக்கொள்கிறது.  விஷவாயு முகமூடிகளுக்காகவே டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்டன! முதல் உலகப்போரின்போது, அமெரிக்க நிறுவனமான கிம்பர்லி கிளார்க் மெல்லிய