இடுகைகள்

பாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார். பாடகர் ஹாலி

ஏஐ மூலம் பாப் ஸ்டாரை உருவாக்கி வருகிறேன்! - கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்)

படம்
  இசைக்கலைஞர் கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்) இசைக்கலைஞர் கிரைமெஸ்   (கிளெர் பௌச்சர்) தொழில்நுட்பம் சார்ந்த இசைக்கலைஞர். இவர், எலன் மஸ்கை மணந்து இரு குழந்தைகளைப் பெற்றார். குழந்தைகளுக்கு எக்ஸ், ஒய் என பெயரிடப்பட்டுள்ளன. எலன், எக்ஸ் என்ற தனது குழந்தையை தூக்கிக்கொண்டுதான் அலுவலக சந்திப்புகளை எதிர்கொள்கிறார்.தொழில்நுட்பம் மூலம் இசையை உருவாக்குவதில் புதுமையான நாட்டம் கொண்டவர் கிளெர். நீங்கள் உங்கள் குரலை இசை ஆல்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அளித்திருக்கிறீர்கள். கட்டற்ற உரிமையில் குரலை கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? குரல் மட்டுமல்ல என்னுடைய முழு அடையாளத்தையே கொடுத்திருக்கிறேன். எதற்காக இப்படி செய்தீர்கள்? நான் நிகழ்ச்சி தயாரிப்பாளர், பொறியாளராக   இருக்க விரும்புகிறேன். நான் சிறந்த முறையில் பாடும் பாடகர் அல்ல. கூச்ச சுபாவம் கொண்டவள். தொடக்கத்தில் நான் உருவாக்கிய பாடல்களுக்கு வீடியோவில் தோன்றிப்பாட பாடகர்களை தேடினேன். யாரும் அப்படி பாட முன்வரவில்லை. மான்ட்ரியலைச் சேர்ந்தவள். சுயாதீனமாக செயல்பட்டேன் என்பதால் பிறருக்கு தயக்கங்கள் இருந்திருக்கலாம்.   பிற பெண் இசைக்கலைஞர்களோடு பாடும்போது என

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் ப

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அ

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆ

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா

உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

படம்
  அர்மான் மாலிக் பாடகர் நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா? சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.  தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா? நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள்

டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதரகள்  கலை சிமு லியூ சீன கனட நடிகர் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள்.  சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது.  வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.   சாண்ட்ரா ஓ  2 ஜோ கிராவிட்ஸ்  அமெரிக்க திரைப்பட நடிகை ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவ

நடிகர்களின் தொழில்வாழ்க்கை நீட்டிக்கப்பட்டிருக்கிறது! - இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

படம்
  மிதுன் சக்கரவர்த்தி மிதுன் சக்கரவர்த்தி இந்தி நடிகர்  நீங்கள் 370 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள். புதிதாக படம் தொடங்கும்போது பதற்றமாக இருக்குமா? பதற்றம் இருக்காது. ஆனால் நடிக்கும் குழு புதிது என்பதால் முடிந்தளவு கவனமாக இருப்பேன். அக்குழுவோடு முழுமையாக இணைய இரண்டு மூன்று நாட்கள் தேவை. ஜோக்குகளை சொல்லி அனைவரிடம் பேசினால்தான் நான் மூத்த நடிகர் என்பதை பலரும் மறப்பார்கள்.  நீங்கள் நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்.  எண்பது, தொண்ணூறுகளில் ஐந்து பாட்டு, ஐந்து பைட், நிறைய வசனங்கள் என இயங்கினோம். இப்போது முக்கியமான பாத்திரங்களில் பெரிய நடிகர்களே நடித்து வருகிறார்கள். இப்படி நடித்தால் நடிகர்களின் தொழில் வாழ்க்கை இன்னும் நீளும்.  அமேசானின் பெஸ்ட் செல்லர்ஸ் தொடரில் நடிக்கிறீர்கள் அல்லவா? அதில் போலீஸ் பாத்திரம். அவரின் பாத்திரத்தை பிறர் எளிதாக கணிக்கவே முடியாது. தனக்கென தனி யூடியூப் சேனலை வைத்து கொண்டிருக்கும் அதிகாரி. நகரில் எங்கு என்னென்ன உணவு கிடைக்கும் என பேசிக்கொண்டே இருப்பவர். அதேசமயம் இரக்கமில்லாமல் நடந்துகொ

பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்

படம்
  பாடகி உஷா உதூப் உஷா உதூப்  பாடகி அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன் பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.  நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா? இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.  பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்? பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.  நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது? இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்

படம்
 டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன் வெள்ளி நிற பந்து உருள, ஏராளமான வண்ணங்கள் பீய்ச்சியடிக்க ஆர்டிஎம் பாட்டு ஒலிக்க டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வந்தன. இதில்தான் எழுபதுகளில் சினிமா உலகமே வாழ்ந்தது. இன்று ரெக்கார்ட் செய்த பாடல்களைப் போட்டு டிஸ்கோ கிளப்புகள் செயல்படுவதில்லை. பலருகும் டிஸ்கோ கிளப்பிலுள்ள பாடல்கள், அதன் சூழல் என்பது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்தியில் இப்படி உருவானவர்தான் பப்பி லகிரி. இவரது பாடல்களை கேட்கும்போது டிஸ்கோ கிளப் பாடல்களின் பீட்டில் இதயம் துடிக்கத் தொடங்கும்.  1976இல் மட்டும் அமெரிக்காவில் பத்தாயிரம் டிஸ்கோ கிளப்புகள் செயல்பட்டு வந்தன.  ஒரு நிமிடத்திற்கு 120 பீட்டுகளை டிஸ்கோ பாடல்கள் கொண்டிருக்கும்.  சாட்டர்டே நைட் ஃபீவர் என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. உலகிலேயே இரண்டாவதாக இந்தளவு விற்ற பாடல் இதுமட்டும்தான்.  பீ கீஸ்  குழுவின் நைட் ஃபீவர் என்ற பாடல் எட்டு வாரங்கள் பில்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 1978ஆம் ஆண்டு நடந்த சாதனையில் முக்கியமானது.  அன்றைய டிஸ்கோ பாடல்களில் இதுதான் இந்த சாதனையை செய்த ஒரே பாடல்.  டிஸ்கோ பாடல்களுக்கான ஒளி அமைப

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இய

அசத்தும் பாப்ஸ்டார் அமித் திரிவேதி!

படம்
  யூட்யூபில் எப்போது உலாவி வருபவர்கள் அமித் திரிவேதியின் ஏடி ஆசாத் சேனலை பார்க்காமல் இருக்க முடியாது. இதில் பெரும்பாலும் அனைத்து வீடியோக்களிலும் அமித் பாடி ஆடுகிறார். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்கிறார்.  சினிமா பாடல்களின் தன்மை இல்லாமலேயே யூட்யூபில் இருபது பாடல்களை வெளியிட்டு விட்டார். பெரும்பாலும் வீடியோக்களில் வெட்கப்படும் அமித், இப்போது தைரியமாக பாடுவதோடு  குழுவாக நடனக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுகிறார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டோம். முதலில் எனக்கு இசையை உருவாக்கினால் போதும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இசையமைப்பாளர் என்பவர், தனக்கென தனி சேனல், இசை அமைப்பது, வீடியோக்கள், நேர்காணல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுவது முக்கியம். இன்றைய காலத்தில் இது நமக்கு அழுத்தம் கொடுக்கிறதாக மாறியுள்ளது என்கிறார்.  2010 முதல் 2015 ஆண்டு வரையில் ஏராளமான ஆல்பங்களை ஹிட் கொடுத்தவர் அமித் திரிவேதி. தேவ் டி, பாம்பே வெல்வெட், உடான் , இஷ்க்ஜாடே, குயின் ஆகிய படங்களின் பாடல்கள் புகழ்பெற்றவை. தற்போதும் இந்தி படங்களுக்கும் தென்னிந்திய படங்களுக்குமான இசையையும் வழங்குகிறார். தெலுங்கில் சைரா நரசிம்மரெட

உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்

படம்
                    பெண் கவிஞர் சாபோ தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர் தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி . அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார் . இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம் .    சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார் . இவர் எந்த ரிதத்தில் , எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர் . லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை . சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம் . இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன . கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன . தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்ட