இடுகைகள்

நூல்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்வெளி

படம்
19                                                                      அபிதா                                                             லா.ச. ராமாமிர்தம்                                                                 வ.உ.சி பதிப்பகம் கரடிமலையிலிருந்து ஒரு பிணக்கினால் வேறு ஊருக்கு வந்து சேருபவனுக்கு கிடைக்கும் வேலை பின்னாளில் அவனுக்கு வசதியான வாழ்க்கை, இசைவான மனைவி அமைய காரணமாகிறது. ஆனால் அவன் விரும்பியது கரடிமலையில் உள்ள ஒரு பெண்ணின் மனதை மட்டுமே. முயற்சித்து தோல்வியுற்றது பெரும் பாரமாய் நெஞ்சையழுத்த அவன் கரடிமலைக்கு தன் மனைவியோடு சென்று தன் பழைய தோழியைத்தேடுகிறான். அவள் கிடைத்தாளா, அவள் வாழ்வின், குழந்தைகள் உள்ளார்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு மீபொருண்மைவாத பதில்தான் லா.ச.ராவின் 'அபிதா'. நாவல் என்பதைவிட கவிதை நூல் போல எனக்குறிப்பிடலாம். முழுக்க அக உணர்வுகளை, தீவிரமான உணர்வு உந்துதலான உணர்ச்சிகளை கவித்துவ மொழியில் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறார் லா.ச.ரா. தன