மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!
பல்லுயிர்தன்மை என்றால் என்ன? குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது. அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன. பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன? பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது. காடுகள் அழிவதற்கு என்ன காரணம்? வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ள...