இடுகைகள்

வயநாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

படம்
            எழுத்தாளர் ஷீலா டாமி உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா? எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா? நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிக...