இடுகைகள்

அவதூறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

சேறாய் அள்ளிவீசப்படும் அலுவலக அரசியல் மலம்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  5.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நான் நேற்று கார்ட்டூன் கதிரவனிடம் பேசினேன். நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்துவிட்டாராம். அவர் மயிலாப்பூர் வருகிறேன் என்றார். ஆனால் சில நாட்களில் என்ன வேலையோ உடனே ஊருக்குப் போய்விட்டார்.  இனி சென்னைக்கு வரும்போது நானே அவரைப் போய் பார்த்து லெஜண்ட் கலைஞருக்கு மரியாதை செய்ய நினைத்துள்ளேன்.  ரஷ்மி பன்சல் எழுதிய நூலைப் படித்து முடித்தேன். இருபது தொழிலதிபர்கள்  பற்றிய கதை. தமிழில் நன்றாகவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. லஷ்மி விஷ்வநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆபீசில் யார் பெயர் மூளையின் ஐக்யூ சார்ந்து முன்னே இருக்கும் என சதி ஆலோசனைகள் நடைபெறுகிறது. அதிகளவு தாக்குதலை என்மீதுதான் கோ ஆர்டினேட்டர் தொடுக்கிறார்.  வசை, அவதூறு, வீண்பழி, சாடை பேசுவது என அனைத்துக்கும் இப்போது புதிதாக பழகி வருகிறேன். வீட்டிலேயே அப்பாவிடம் இதை எதிர்கொண்டிருப்பதால், பெரிய அதிர்ச்சி இல்லை. வேலை மனநிலை தான் கெட்டுப்போய்விடுகிறது. எவ்வளவு நாள் தாங்க முடியும் என்று பார்ப்போம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் படித்து வருகிறேன். இந்த ஆண்டு புத்தகத

விவசாயிகள், மத, ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து வென்றிருக்கிறார்கள்! - சதேந்திரகுமார்

படம்
  சதேந்திர குமார் சமூகவியலாளர் இவர் ஜிபி பான்ட் சமூக அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இக்கழகம் அலகாபாத் பல்கலையின் ஓர் அங்கமாக உள்ளது.  வேளாண்மை சட்டங்கள் மூன்றுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. விவசாய அமைப்புகளின் போராட்டம் வெற்றி பெற என்ன காரணம்?  இந்த வெற்றிக்கு காரணம் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்தான். அமைப்பை நிர்வாகம் செய்த தலைவர்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு ஆகியவை முக்கியமான காரணம். நகரம் மட்டுமன்றி, கிராமப்புற  விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது முக்கியமானது. இந்த போராட்டத்தில் இளைஞர்களும் பெண்களும் பங்கெடுத்தனர். விவசாயிகள் போராட்டங்களில் இருந்தபோது, வீட்டிலுள்ள பிற குடும்ப உறுப்பினர்கள் நிலங்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். இதுதான் போராட்டத்தை பெரும் ஊக்கமாக எடுத்துச்செல்ல உதவியது. பல்வேறு குரல்கள் ஒலிக்கும்படியான தேசிய அளவிலான இயக்கமாக விவசாயிகளின்போராட்டம் மாறியது இதனால்தான்.  கொரோனா பெருந்தொற்று போராட்டத்தை பாதித்ததா? நகரங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள், பெருந்தொற்று காரணமாக வேலைகளை இழந்தனர். இவர்களுக்கும் வி

ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

படம்
            அவதூறு வழக்கு எனும் ஆயுதம் ! இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும் , அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர் . இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது . அதிமுக அரசுதான் . இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன . இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள் ? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான் . 1992 ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது . சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது . இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான் . அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு , ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது . ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது . இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக , அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொ