இடுகைகள்

விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தை சொல்லும் சிறுவனால் தீரும் கொலை மர்மம்!

  மறுவாசிப்பு 2(2025) சித்திரமும் கொல்லுதடி டிடெக்டிவ் ராபின் - மார்ட்டின் முத்து காமிக்ஸ் க்ரைம் திரில்லர் காமிக்ஸ் விலை ரூ.10 கருப்பு வெள்ளை காமிக்ஸ். அமெரிக்காவின் நியூயார்க்கில் மழைபெய்யும் நாளன்று ஒரு பெண் கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அத்தோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. மர்மக் கதைக்கு பொருத்தமான காட்சி. அடுத்த நாள், பின்னி என்ற கட்டை குட்டை தோற்றத்தோடு தொழிலதிபர், கிம் என்பவளைப் பார்க்க பூங்கொத்தோடு வருகிறார். லாஸ்கி என்ற கார் மெக்கானிக், கிம் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள், உங்களிடம் உள்ள காசுதான் அவளை மயக்குகிறது என வன்மத்தோடு பேசுகிறான். பின்னியைப் பொறுத்தவரை அவர் நியூயார்க்கிற்கு தொழில் விஷயமாக வந்தாலும் கிம் என்ற பெண்ணோடு கொண்டுள்ள காதல், பாலுறவு ஒரு போதையாக மாறியிருக்கிறது. அவளை மணந்துகொள்ளலாமா என்று கூட யோசித்துக்கொண்டே நடைபோடுகிறார்.  அவர் கிம்மின் வீட்டுக்கு படியேறுகிறார். லாஸ்கி பொறாமையில் பேசுவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திறந்திருந்த கதவை தள்ளியபடி உள்ளே நுழைகிறார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தால் கிம் தலையில் அடிபட்டு இறந்து க...

ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?

படம்
  ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.  அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...

வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!

 குகை - ஜெயமோகன் குறுநாவல் இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே க...

காப்புரிமையால் நீக்கப்பட்ட பதிவு மீண்டும் பதிவேற்றம் - மங்கா காமிக்ஸ் விமர்சனத்திற்கு வந்த சோதனை!

படம்
    அல்டிமேட் சோல்ஜர் என்ற மங்கா காமிக்ஸை படித்துவிட்டு அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை கோமாளிமேடையில் பதிவிட்டிருந்தோம். விமர்சனம்தான். அதற்கே வி்ஷ் மீடியா நிறுவனத்தின் எரிக் க்ரீன் என்பவர் புகார் கொடுத்து காப்புரிமை விதி மீறல் என அறிவித்துவிட்டார். அவரது நிறுவனத்தின் காமிக்ஸை பலரும் பிரதி எடுத்து வெவ்வேறு தளங்களில் வெளியிடுகிறார்கள். அதை தடுப்பது அவர்களது நிறுவனத்தின் வேலை. இதில் காமிக்ஸை படித்துவிட்டு அது எங்கே கிடைக்கும் என இணைய லிங்கை பரிந்துரைத்தது காப்புரிமை புகாருக்கு உட்பட்டிருக்கிறது.   பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரில் பலரையும் மிரட்டி வருகிறார்கள். அனி என்ற செய்தி நிறுவனம் கூட யூட்யூபர்களை மிரட்டி சேனல்களை மூட போலியான புகார்களை அனுப்பி வருவதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.   கோமாளிமேடையின் பதிவு, இணைய லிங்க் இல்லாமல் மீண்டும் பதிவிடப்படுகிறது. தனிநபர்கள் பங்களிப்புடன் வெற்றி பெற்ற பிளாக்கர் நிறுவனம், இப்போது உலகிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிட்டது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற நி...

மாபியா குழுவில் அண்ணன் உளவாளி, காவல்துறையில் தம்பி ஒற்றன்! - இன்சைடர் - துருக்கி தொடர்

படம்
       இன்சைடர் துருக்கி தொடர் 10 +--- மார்டின் ஸ்கார்சி எடுத்த ஆங்கிலப்படத்தை நினைவூட்டுகிற டிவி தொடர். அதாவது, மாபியா தலைவர், தனது வளர்ப்பு மகனை போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்ய வைத்திருப்பார். அதேசமயம், அவரது குழுவில் போலீஸ் அதிகாரி ஒருவன் உளவாளியாக வேலைக்கு சேர்வான். இந்த இருவருமே உளவாளிகள்தான். யார் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆங்கிலப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதுவேறு. அதே லைன்தான். ஆனால் இங்கு வேறுபாடு ஒன்றுதான். இப்படி உளவாளிகளாக இருப்பவர்கள் அண்ணன், தம்பியாக இருந்தால் எப்படியிருக்கும்? துருக்கிக்காரர்கள் உணர்ச்சி கொந்தளிப்பு கொண்டவர்கள். தொடரும் கூட சாமானியமாக முடியாது. இழுத்துக்கொண்டே போகும். அதற்கு இந்த தொடரும் விதிவிலக்கல்ல. மெதின் என்பவர், செலால் என்ற கெபாப் கடையை நடத்தி வரும் மாபியா தலைவரிடம் வேலை செய்கிறார். மேற்பார்வைக்கு கெபாப் கடை என்றாலும் உள்ளுக்குள் சட்டவிரோத வேலைகளை செலால் செய்து வருகிறார். இவருக்கான ஆட்களை பிச்சைக்கார குழு மூலம் காஸ்குன் என்பவன் உருவாக்கித் தருகிறான். செலாலிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். அத...

புலிகளை பாதுகாக்க பாடுபட்ட வால்மிக் தாப்பர் - அஞ்சலிக் கட்டுரை

படம்
  சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான வால்மிக் தாப்பர் காலமாகியுள்ளார். செரிமான உறுப்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். உலகில் காடுகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவராக வால்மிக் தாப்பர் இருந்துள்ளார். இரண்டு டஜன் நூல்களை புலிகளைப் பற்றி எழுதியுள்ளார். பிபிசி வெளியீடான லேண்ட் ஆப் டைகர் (1997) என்ற ஆவணப்படம் இவரது ஆளுமையை உலகிற்கு வலுவாக சொன்னது. வால்மிக் தாப்பர் கானுயிர்கள் பற்றி முறையாக கற்று அறிந்தவர் அல்ல ரந்தம்பூரில் உள்ள புலிகளைப் பார்த்து ஆய்வு செய்து ஐம்பது ஆண்டுகளாக அறிவை சேமித்து அதை உலகினரோடு பகிர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டு, ராந்தம்பூர் பவுண்டேஷன் என்ற தொண்டூழிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியாக காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தஸ்ட்கர் என்ற மற்றொரு தொண்டூழிய நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2012ஆம் ஆண்டு டைகர் மை லைப், ராந்தம்பூர் அண்டு பியான்ட் என்ற நூலை எழுதினார். இரைச்சல் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளி தொலைவிலுள்ள இடங்களில் புலிகள் வாழ்கின்றன, வாழ விரும்புகின்றன என ச...

தற்காப்புக்கலை கற்ற விதவையின் புலனாய்வு திறமை!

படம்
  ஹவுஸ்ஒய்ப் டிடெக்டிவ் சீன தொடர் 20 எபிசோடுகள் யூட்யூப் நாயகி கு ஷியாங்கை மனதில் வைத்து எழுதப்பட்ட தொடராக பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால், தொடர் அப்படியாக செல்லவில்லை. பெண் ஆணின் தோளில் சாயவேண்டும், அவனை சார்ந்துதான் வாழவேண்டும் என்ற செய்தியை கொலை, வழக்கு, விசாரணை ரீதியில் கூறியிருக்கிறது. சீனத்தொடரின் கதை நடக்கிற காலம். சீனாவை பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூறுபோட்டு அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த காலம். பிரெஞ்சு ஆட்களின் கீழ் காவல்துறை இயங்குகிறது. அதில் சீன ஆட்கள் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள். மேலதிகாரியாக பிரெஞ்சுக்காரர் இருக்கிறார். இக்குழுவினர் கொலை வழக்குகளை துப்பறிகிறார்கள். அப்படியான வழக்குரைஞரின் கொலைவழக்கில் அவரது மனைவியான நாயகி கு ஷியாங்க் மீது பழி விழுகிறது. அதில்தான் நாயகி கு ஷியாங்க், நாயகன் ருயி ஆகியோர் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர், வழக்கில் இருந்து கு ஷியாங்க் போதிய ஆதாரங்கள் இல்லையென்று விடுதலை ஆகிறார். தற்காப்புக்கலை, துப்பு துலக்குதல் என இரண்டிலும் திறமை கொண்டவர் என்பதால் அவருக்கு போராடி பெண் போலீஸ் மரியாதையை, வேலையை வாங்கிக்கொடுக்கிறார்கள். அதற்கு...

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

கிராமத்தில் பெண் பித்தனான தந்தையைக் கொன்ற கொலைகாரனை தேடும் புலனாய்வு பத்திரிகையாளன்!

படம்
  ட்ரூ தெலுங்கு இப்படத்தில் வில்லனும், நாயகனும் ஒருவரே. உளவியல் அடிப்படையிலான கதை. லண்டனில் பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டிருக்க கூடிய நாயகன், ஆந்திரத்திற்கு வருகிறார். அவரது அப்பா திடீரென மின்சார தாக்குதலில் இறந்துவிடுகிறார். அதற்காகவே அயல்நாட்டிலிருந்து வருகிறார். அவர் செய்யவேண்டியதை நெருங்கிய நண்பன் செய்து எரியூட்டிவிடுகிறான். இப்போது நாயகன் செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை. எனவே, அப்பாவின் இறப்பு கொலையா என துப்பறிகிறார். ஆதாரங்களை சேகரிக்கிறார். இறந்துபோன இடத்திற்கு சென்று ஆராய்கிறார். அப்போது அவரை சிலர் விசாரணை செய்யாதே என எச்சரிக்கிறார்கள். யார் அவர்கள் என தேடிப்போகிறார். அப்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறது. அவரை மிரட்டிய இளம்பெண், அவரது காதலி என்று கூறுகிறார். கூடவே வீடியோ ஒன்றையும் கொடுக்கிறார். அப்போதுதான் இறந்துபோனவர் பற்றிய இன்னொரு பக்கம் தெரியவருகிறது. மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற படம் வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அதேபாணி. நாயகனின் அப்பா கைத்தொழில் மன்னன். காம சூத்திர கண்ணன். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக அக்குடும்பத்தில் உள்ள பெண்...

தோற்றுப்போன உளவுத்துறை ஆபரேஷனுக்கு காரணமான துரோகியை கண்டுபிடிக்க உதவும் குடியிருப்புவாசி அமைப்பு!

படம்
   மை சீக்ரெட் டெரியஸ் கே டிராமா 16 எபிசோடுகள் எம்பிசி டிவி தேசதுரோகி என்ற குற்றம்சாட்டப்பட்ட என்ஐஎஸ் ஏஜெண்ட், தோற்றுப்போன தனது ஆபரேஷன் பற்றி துப்பறிந்து துரோகியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. தொடரின் நாயகன் டெரியஸ். அவனை உளவுத்துறை ஏஜென்ட் என பில்டப் செய்கிறார்கள். ஆனால், அவனை விட எதிரி பலசாலி. டெரியஸ் எத்தனை முறை தாக்கப்பட்டார், துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கைவிரல்களை விரல் விட்டு எண்ணவேண்டும். அத்தனை முறை நாயகன் அடிபடுகிறார். பரிதாபம். தொடர் முழுக்க என்ஐஎஸ் அமைப்பை விட கிங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குரூப் சிறப்பாக இயங்குகிறது. நாயகி இரண்டு குழந்தைகளின் தாய். அதேநேரம் அவளுக்கு டெரியஸ் மீதும், டெரியசுக்கு அவள் மீதும் காதல் வருகிறது. அதுபோன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. கணவர் இறந்தபிறகு இரு குழந்தைகளை வளர்க்க நாயகி ஆரின் படும்பாட்டை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சில நேரம் ஆரின் பாத்திரம் நடிப்பது மிகை நடிப்பாக மாறுகிறது. அனிமேஷன் பாத்திரத்தின் நடிப்பை பின்பற்றுகிறாரோ.... நாயகனைப் பொறுத்தவரை அதிக உணர்ச்சிகளை கொட்டி நடிப்பவரல்ல. டெரியஸ் பாத்திரமே சிந்...

நூறு நாட்கள் சாதாரண மனிதராக வாழ முற்படும் பெரும் பணக்கார வாரிசு!

படம்
     புருஷோத்தமுடு தெலுங்கு ராஜ்தருண், ஹாசினி சுதீர் உன்னால் முடியும் தம்பி என்ற தமிழ்படத்தினுடைய கதையைப் போன்றதுதான். அதை தெலுங்கு கரம் மசாலா சேர்த்து எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல வீணடித்திருக்கிறார்கள். ராஜ்தருண், கார்ப்பரேட் நிறுவனத்துடைய அடுத்த இயக்குநராக வரக்கூடியவர். ஆனால், நிறுவனரின் விதி ஒன்று உள்ளது.அதாவது அடுத்த இயக்குநராக வரக்கூடியவர், நூறு நாட்களுக்கு தன்னுடைய அடையாளங்களை மறைத்து சாதாரண மனிதராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்து நூறு நாட்களை முடித்தால் மட்டுமே அவர், நிறுவனத்தின் இயக்குநராக முடியும். ராஜ்தருண் இந்த சோதனையை ஏற்றுக்கொள்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி. நிறுவனரின் விதியைப் பற்றி பார்ப்போம். நிறுவனம் லாபகரமாக இயங்குவது முக்கியம். அதேசமயம், லாபத்திற்காக ஒருவர் மனதிலுள்ள கருணையை மனிதர்கள் மீதான மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. அதைத்தான் நிறுவனர், தனது வம்சாவளியிடம் எதிர்பார்க்கிறார். அப்படியான மனம் கொண்டவன்தான் நிறுவனத்தை சரியான பாதையில் நடத்த முடியும் என நம்பி அப்படியான வினோத விதியை ஏற்படுத்துகிறார். படத்தில் ராமு பாத்திரத்தில...

திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!

படம்
    நேடு விடுதலா ஆசிப்கான், மௌர்யானி தெலுங்கு திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம். படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை. தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை...

வளர்த்த அப்பாவைக் காப்பாற்ற, பெற்றெடுத்த அப்பாவிடம் பணத்தை கொள்ளையடிக்கும் மகன்!

படம்
 மா நானா சூப்பர் ஹீரோ சுதீர்பாபு, சாயாஜி ஷிண்டே தெலுங்கு எப்போதுமே ஜிம் பாய் போல உலாவும் சுதீர்பாபு, இம்முறை சண்டைக் காட்சிகளே இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் நெகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியும் இல்லை. அனைத்துமே மிக மேலோட்டமாக உள்ளது. ஒரு தந்தை கையில் காசு இல்லை என்பதால் பிள்ளையை மதர்தெரசா என்ற அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் வளர்ப்புதந்தை சாயாஜி ஷிண்டே. ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ, அவர் வாழ்க்கை குழந்தை வந்த பிறகு தலைகீழாகிறது. மனைவி இறக்கிறார். வேலை போகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைய கடன்காரராகிறார். வளர்ப்பு பிள்ளை ஜானியை கரித்துக்கொட்டுகிறார். மகன்தான் அப்பா செய்யும் பித்தலாட்டங்களுக்கு கடன் வாங்கி காசு கட்டுகிறார். ஜானி மெக்கானிக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அதை வைத்தே பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில் பெற்ற அப்பா, மகன் ஜானியைத் தேடி வருகிறார். அப்போது ஜானி, அவர் தனது அப்பா என தெரியாமலேயே அவருக்கு கார் ஓட்டுகிறார். சில நூறு மைல்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்த சமயம், வளர்த்த அப்பா சீன...

பணத்திற்காக, வைரத்திற்காக, செல்வத்திற்காக விநாயகர் சிலையை துரத்தும் கூட்டம்!

படம்
  கம் கம் கணேசா ஆனந்த் தேவர்கொண்டா, நயன் சரிகா தெலுங்கு மளிகை கடையை கொள்ளையடிக்கும் இரு திருடர்கள், நகைக்கடையை கொள்ளையடித்து வைரம் ஒன்றை லவட்டிக்கொண்டு தப்பிக்கிறார்கள். நகைக்கடை முதலாளியை வேறு சுட்டுவிடுகிறார்கள். அக்கடையின் பையன்தான், வைரத்தை திருடச்சொல்லி ஐடியா கொடுக்கிறான். வைரத்தை திருடியபிறகு, இரு திருடர்களை சுட்டுக்கொன்றுவிடுவது மறைமுக திட்டம். ஆனால், வைரத்தை திருடிய நாயகன், அவனது நண்பன் ஆகிய இருவருக்கும் எதற்கு கையிலுள்ள வைரத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்குவது? நேரடியாக வைரத்தை நாமே விற்றுக்கொள்ளலாமே என நினைக்கிறார்கள். வைரத்தோடு தப்பி ஓடுகிறார்கள். இது ஒரு கதை. இன்னொரு கதை. தேர்தல் நேரம், அதில் போட்டியிடுபவர், நூறு கோடி பணத்தை விநாயகர் சிலையில் வைத்து கடத்துகிறார். எல்லாம் மக்களுக்கு விநியோகம் செய்யத்தான். அந்த சிலை மாறிவிடுகிறது. யார் அதை மாற்றியது என ஆட்களை விட்டு தேடுகிறார். அதில் இரு திருடர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். படத்தில் இயக்குநர் ஒரு லாஜிக்கை மறந்துவிட்டார். அதாவது, ஹைதராபாத் திருடர்களில் ஒருவனான நாயகன், வைரத்தை அரசியல்வாதி தரப்பு கொண்டு வரும் முதல் விநாயகர் சி...