இடுகைகள்

கதிர்வீச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுக்கழிவுகளை பாதுகாக்க பின்லாந்து செய்யும் முதல் முயற்சி!

படம்
  அணுக்கழிவுகளுக்கான நிரந்தர பாதுகாப்பிடம்! ஃபின்லாந்தின் மேற்கு கடற்புரத்தில் அமைந்துள்ளது, ஒல்கிலூடோ தீவு (Olkiluoto). இங்குதான் உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிரந்தர அணு உலைக் கழிவுகளுக்கான பாதுகாப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர்.   இங்குள்ள அணுக்கழிவு செயல்பாட்டு அறைகள், கதிர்வீச்சைத் தடுக்க  தடிமனான கான்க்ரீட் சுவர்களால் கட்டப்படுகின்றன. பாதுகாக்கவேண்டிய யுரேனியக் கழிவு, உயரமான செம்பு பெட்டகத்தில் அடைக்கப்படுகிறது. பிறகு, பெட்டகம் பென்டோனைட் களிமண்ணால் (Bentonite) உறுதியாக அடைக்கப்படுகிறது.  பின்னர், பெட்டகம் கடல்மட்டத்திலிருந்து 420 கி.மீ. கீழே பாறைகள் சூழ்ந்த இடத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கென பூமியின் ஆழத்தில்  430 சுரங்கங்களை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அணு உலை மின்சார உற்பத்தியை மெல்ல குறைத்து வருகின்றனர். காரணம், அணுஉலை கழிவுகளால், சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடுகளே காரணம். ஃபின்லாந்து, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை தயாரிப்பதாக, ஐரோப்பிய யூனியனில் கூறியுள்ளது. நான்கு ரியாக்டர்கள் ஒல்கிலூடோ  தீ

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

படம்
  இயற்பியல்  பிட்ஸ் இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.  நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்! டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது.  நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது. மனிதர்களின் கதிர்வீச்சு! நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியி

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்

படம்
              விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள் எட்வின் ஹப்பிள் இவர் 1927ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் தொலைதூரத்தில் உள்ள விண்மீன்களை கண்டுபிடித்து அதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரால்ப் ஆல்பர், ராபர்ட் ஹெர்மன் ஆகிய இருவரும் 1948ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் வெளியாகும் கதிர்வீச்சு, அதன் வெப்பநிலை பற்றி கண்டுபிடித்தனர். -268 டிகிரி செல்சியஸ் என உறுதி செய்தனர். 1964 ஆம் ஆண்டு அர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் ஆகியோர் பலவீனமான ரேடியோ ஒலி ஒன்றை பதிவு செய்தனர். பின்னர் அது பெருவெடிப்பில் உருவான கதிர்வீச்சில் உருவானது என விளக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு கோப் காஸ்மிக் பேக்கிரவுண்ட் எக்ஸ்ப்ளோரர் சாட்டிலைட் , பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சை கண்டுபிடித்தது. பெருவெடிப்பு சார்ந்த கதிர்வீச்சு இதற்கு காரணம் எனவும், அதன் துல்லியத்தன்மையும் பின்னர் கண்டறியப்பட்டது. 2001ஆம் ஆண்டு வில்கின்சன் மைக்ரோவேவ் புரோப் விண்வெளியில் ஏவப்பட்டது. இதன்மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என கணிக்கப்பட்டது. பிபிசி  

சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி

படம்
        மிஸ்டர் ரோனி சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா? சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான். சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு. 2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன்

மைக்ரோவேவ் ஓவன் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது, அதிலிருந்து நாம் சற்று தள்ளி நிற்க வேண்டுமா? மூடநம்பிக்கையை இப்படியும் ஏற்படுத்தலாம் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மைக்ரோ ஓவனில் பயன்படும் அலைகள் உங்கள் உடலை பாதிக்காது. அப்படி பாதித்தால் உணவு என்னாகும்? மறைமுகமாக அது உணவுப்பொருட்களை சூடாக்கி உங்களுக்கு தேவையான உணவை உருவாக்குகிறது. ஓவன் பற்றிய கையாளும் குறிப்பை படித்தாலே இதுபோன்ற குழந்தைதனமான கேள்விகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள். நன்றி - பிபிசி 

தெரிஞ்சுக்கோ - சீசனே இல்லாத சூப்பர் வாழைப்பழம் !

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வாழைப்பழம் சாப்பிடாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேலான வெரைட்டிகளில் வாழைப்பழம் பஜார்களை நிரப்பி வருகிறது. எல்லா சீசன்களில் நம் வாயை நிரப்பி பசியை ஆற்றுவது வாழைப்பழம்தான். அதற்காக அதனை ஏழைகளின்...... என்று எந்த பெயர் சூட்டவும் எனக்கு ஆர்வமில்லை. எப்போதும் கிடைக்கும் எளிய பழம் அது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம். எப்போதும் விளையும் பழம் என்பதால், பூஞ்சைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாழைப்பழத்தின் சதவீதம் அதிகம். ஒரு வாழைத்தாரில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? விடுங்கள். விற்கும் செட்டியார் எண்ணுவார். உலகளவில் 473 பழங்கள் இருந்ததே சாதனையாக கூறுகிறார்கள். மனிதர்களுக்கும் வாழைப்பழத்திற்குமான மரபணுப் பொருத்தம் 60 சதவீதமாக உள்ளது. உலகளவில் 5.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. உலக சந்தையில் 99 சதவீத வாழைப்பழங்கள் கேவண்டிஷ் ரக வாழைதான். அமெரிக்கா கடந்தாண்டில் மட்டும்  2.8 பில்லியன் மதிப்பிலான வாழைப்பழங்களை இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் வாழைப்பழத

5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!

படம்
மினி பேட்டி! டாக்டர்  ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர் 5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே? ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா? உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல. 5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா? ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன? பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வ

நகரும் செர்னோபில் - ரஷ்யாவின் சூப்பர் திட்டம்!

படம்
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் நிலங்களில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார்கள். அடுத்து அவர்களின் பார்வை ஆர்க்டிக் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அங்கு கனடா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றன. உச்சபட்சமாக கடுங்குளிர் நிலவும் அங்கு, அணு உலை ஒன்றை நகரும் விதமாக அமைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் பெயர் அகாடெமிக் லோமோன்சோவ். அணு உலை என்றால் அதற்கு உடனே மின்நிலையம் என்று சொல்லித்தானே எழுதுவார்கள். இதனையும் அப்படித்தான் கூறுகிறார்கள். இந்த அணுஉலை மூலம் 70 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை வைத்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தோராயமாக மின்வசதியை வழங்க முடியும். சாதாரணமாக நிலத்தில் அமைக்கும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை கண்காணித்து முறைப்படுத்துவதே கடினம். இதில் ஆர்க்டிக் பகுதியில் நகரும் விதமாக அணுமின் நிலையம் அமைப்பது சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜன் ஹேவர்கேம்ப். ரஷ்யா உக்ரைனில் செர்னோபில் விஷயத்தில் பல தகிடுத த்தங்களைச் செய்தது. பாதுகாப்பு வ

செர்னோபில் செல்லலாமா?

படம்
செர்னோபில் அணு உலை கசிவு, அதன் பாதிப்புகள் இன்றையவரைக்கும் உண்டு. மேலும் அங்கு இதற்கான சுற்றுலா திட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மனிதர் 3 மில்லிவெர்ட்ஸ் கதிர்வீச்சு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்று அமெரிக்கன் கதிர்வீச்சு கல்லூரி அறிக்கை தகவல் சொல்லுகிறது. கதிர்வீச்சின் அளவு 1-20 எம்எஸ்விக்கும் குறைவாக மனிதர்கள் செல்கிறது. 50-200 அளவு என்பது மனிதர்களின் மரபணுக்களைப் பாதிக்கிறது. 200-1000 அளவு மாறும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். 2000 எனும் அளவுக்கு கதிர்வீச்சு அதிகரிக்கும்போது கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் வரும். 10 ஆயிரம் அளவு என வரும்போது இறப்பு நேருகிறது. செர்னோபில்  அணுஉலையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் 8 ஆயிரம் - 16 ஆயிரம் கதிர்வீச்சு அளவு இருந்தது. இதன்படி 134 ஆட்கள் கடுமையான கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது. 2018 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பார்வையாளர்கள் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு வந்தனர். மேலும், இங்கு வரும் பார்வையாளர்கள் எதையும் தொட, உட்கார, கேமரா பொருட்களைப் பயன்படுத்த தடை உள்ளது.  நன்றி: லிவ்