இடுகைகள்

சாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

படம்
  பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார்  மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்...

தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா

 தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா ஆய்வு நூலின் சுருக்கம் ஆங்கில ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டீன் மேற்சொன்ன பெயரில் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைக்கிறது. ந சி கந்தையா எழுதிய நூல், பல்வேறு நூல்களின் சுருக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நூல்கள் என்ற தெளிவு இல்லை.  நூலின் முன்னுரையில் எட்கர் தர்ஸ்டீன் ஆய்வை பார்ப்பனர்களிடம் கேட்டு எழுதிக்கொண்டார். கள ஆய்வுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த நூலை ந சி கந்தையா கள ஆய்வு செய்து எழுதினாரா என்றால் அதற்கு எந்த பதிலுமில்லை. ஆங்கிலத்தில் எழுதி வைத்ததை அப்படியே தமிழில் சுருக்கமாக 85 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அவ்வளவே மற்றபடி சில இடங்களில் தெளிவுக்கு அடிக்குறிப்பு உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள சாதிகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பட்டப்பெயர்கள், திருமண சடங்குகள் ஏன ஏராளமான விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில சாதிகளைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன. சில சாதிகளுக்கு சொல்ல ஏதுமில்லை என்பது போல சுருக்கமாக உள்ளது. வதந்தி பத்திரிகையில் வர...

இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!

படம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...

நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.

படம்
பெருமை மிக்க சூத்திரன் இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட. பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது. தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சு...

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!

படம்
  இந்து சாதி முறை அமைப்பு உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை. வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் எ...

சாதி என்பது ஒருவகையான இந்து மனநல நோய்!

படம்
  இந்து பார்ப்பன கருத்தியல் என்பது, லாபத்தை அதிகரித்து மேல்சாதியினரை வைத்து சொத்துக்களை கட்டுப்படுத்தி தங்களது அந்தஸ்து, பிற சாதிகளுக்கு இடையிலான உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக இருக்கிறது. பார்ப்பன சமூகம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமூகத்திலுள்ள பிற சாதி இளைஞர்களை தவறாக வழிநடத்தி தங்களது கருத்தியலை பாதுகாக்க போரிடுமாறு செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கல்வி என்பது இந்தியாவுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சாதி, தீண்டாமை என்பது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட காரணமே படித்த மக்கள்தான். சாதி என்பது அவர்களின் மூளையில் உள்ளது. இது ஒருவகையான இந்து மனநல நோய். இந்து மதம் என்பது அமைப்பு என்பதையும் கடந்தது. இ்ங்கு வாழும் ஒவ்வொரு இந்துவும் சாதி, தீண்டாமையை கடைபிடிப்பதை தனது மதக்கடமையாக கருதுகிறான். இதில் பொருளாதார அமைப்பும் உண்டு. முதலாளி, தனது அடிமையை நன்றாக சோறு போட்டு, உடை உடுத்த வைத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து சந்தைமதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்வாரோ அதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. தீண்டாமை என்பதைப் பொறு...

இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!

படம்
 இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம். இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.   இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை ச...

அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?

படம்
 சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

சேரியோ, அக்கிரஹாரமோ மனதில் ஈரம் இருப்பது முக்கியம்! ஆண்டான் அடிமை - இயக்கம் மணிவண்ணன்

படம்
    ஆண்டான் அடிமை சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உண்ணி இயக்கம் மணிவண்ணன் அக்ரஹாரத்தில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரில் வளர்க்கப்படும் ஒருவர் தனது பெற்றோரைத் தேட முயல்கிறார். இதன் விளைவாக அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை. இயக்குநர் மணிவண்ணன் இடதுசாரி கருத்தியல் கொண்டவர். ஆண்டான் அடிமை வணிகப்படம் என்றாலும் படத்தில் பேசி இருக்கிற அரசியல் நிறையப்பேருக்கு பிடித்தமானது அல்ல. அவரின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ், படத்தின் கருத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் குத்துப்பாட்டு, ஆபாசம் எல்லாம் கிடையாது. எடுத்துக்கொண்ட மையப்பொருளை தீவிரமாக பேசியிருக்கிறார்கள். புத்தியிருப்பவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் நிறைய யோசிக்க வைக்கும். சத்யராஜ் படத்தில் இரு வேடங்கள் செய்கிறார். ஒன்று சேரியில் அடிமாடுகளை லாரியில் கொண்டு வந்து சேர்க்கும் லாரி டிரைவர் சிவராமன். இன்னொன்று, சுப்பிரமணிய ஐயரின் மகன், சங்கரன். இரு பாத்திரங்களுமே பல்வேறு உளவியல் சிக்கல்களை, சங்கடங்களை அந்தந்த சாதி அளவில் சந்திக்கிறது. சேரியில் வாழும்போது சத்யராஜ்...

நான்கு ஆண்டுகளில் அப்பாவை ஏமாற்றிய தாய்மாமனை பழிவாங்கும் நாயகனின் வெற்றிக்கதை!

படம்
               ஜெயித்துக் காட்டுவேன் இயக்கம் கே ராகவேந்திர ராவ் இசை ஜே சக்கிரவர்த்தி நடிப்பு வெங்கடேஷ், ஸ்வேதா, ஜெயசுதா படிப்பில்லாமல் கிடைக்கிற கூலி வேலை செய்யும் ராஜா என்பவன், சுந்தரராமன் என்ற பணக்கார தொழிலதிபரின் மகளோடு பந்தயம் போட்டு தொழில் செய்து முன்னேறுகிற கதை. ஏழை நாயகன், பணக்கார நாயகி என்ற அதே கதை. தெலுங்கு ஆட்களைப் பொறுத்தவரை எதிரியாக இருந்தாலும் அவன் நாயகனுக்கு தாய்மாமனாக, அப்பாவாக, பெரியப்பாவாக இருக்கவேண்டும். நாயகி யாரோ ஒருவரைக் காதலித்தால் எப்படி? அவள் நிச்சயம் தனது தாய்மாமனையே காதலிக்கவேண்டும். கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இதெல்லாம் இயக்குநர் உள்நோக்கத்துடன் செய்யும் விஷயங்கள். அப்போதுதான் தெலுங்கு கலாசாரம் வானளவு புகழோடு வளர்ந்தோங்கும். உதவாக்கரையான இயக்குநர் எழுதிக்கொடுப்பதை ஒப்பிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூட மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்தளவு மழுமட்டையாக மக்களை மாற்ற திரைப்படங்கள்தான் ஒரே வழி. கே ராகவேந்திர ராவ், பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கீழிருந்து கேமராவில் பதிவு செய்து அவர்களை காட்சி ரீதியாக கண்ணியப்...

பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது!

படம்
      பெரியார் ஆயிரம் தர்மம் என்று இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் அதற்கு முன் பழக்கத்திலிருந்த வேதங்களிலும் கூறப்பட்டது வர்ண தர்மத்தையே ஆகும் மனிதர்களை பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம். எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கு இருக்கவேண்டிய குணங்கள்- அவர்கள் செய்யும் பொதுநலப் பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது. செய்யும் பொதுப்பணியில் பதவி பெருமை, இலாகா, தனி அந்தஸ்து போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது. ஒரு பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது. எந்த காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. நீதி கெட்டது யாரால் என்ற நூலில் பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்கிற...

இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

      குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம் இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன...

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

படம்
               சேரன்மாதேவியில் வ வே சு அய்யர் நடத்திய குருகுலம் மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு சாதி பேதத்தை ஏற்படுத்தியது குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை என்ன? தமிழ் மக்கள் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தச் செய்தார். காங்கிரசிலிருந்து பெரியார் விலக காரணம் வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்காமை வைக்கம் போராட்டம் என்பது கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டம் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கண்ணம்மாள் - நாகம்மையார் எங்களது நோக்கம் பதவிக்கோ - பெருமைக்கோ ஆட்சி பீடத்தில் அமரவோ அல்ல. காங்கிரசாரே ஆளட்டும். அவர்களே சட்டசபைக்குப் போகட்டும். ஆனால், வடநாட்டானுக்கு அடிமைப்பட்டிருந்தால் நாங்கள் அவ்வாட்சியை எதிர்த்தே தீருவோம் - தந்தை பெரியார் எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? -குடி அரசு 8.11.193...

பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

படம்
               குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்! உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள். வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை. சீக்கிய ...

சீனா - இந்தியா ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

படம்
      ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்? இன்றோ நாளையோ நிச்சயமாக ஆதிக்கத்தை அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடைபெறும். அது உறுதி. அப்போது அதில் யார் வெல்வது என்பதை ஒரு நாடு எந்தளவு செலவு செய்து ராணுவத்தை உருவாக்கியுள்ளது என்பதைப் பொறுத்தே கூற முடியும். இந்திய அரசு, இணையத்தின் கட்சி சார்ந்த கேலி வதைக்குழுக்களை வைத்து வெல்ல முடியாது. இந்துமத ராணுவ வீரர்கள் மட்டுமே போராடி வெற்றியைப் பெற்றுவிடுவார்களா என்றும் புரியவில்லை.   சீனா, சாங்காய் கூட்டுறவு அமைப்பில் இடம்பெற்ற நாடுகளுடன் ராணுவப் பயிற்சிகளை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கியுள்ள பயிற்சிகளின் கூடவே, மேற்கு நாடுகளின் போர்முறைகளை அறிய வேண்டுமே?  அதற்காக பாகிஸ்தானின் நட்பு உதவுகிறது. அந்த நாட்டு ராணுவத்திற்கு அமெரிக்க அரசு பயிற்சி அளிக்கிறது. இப்படியாக சீனா தன்னை ராணுவத்தில் வலிமையான நாடாக வளர்த்துக்கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சீனா - 20,35,000 இந்தியா - 14,55,550 ராணுவ பட்ஜெட் சீனா - 231.4 பில்லியன் டாலர்கள் இந்தியா - 75 பில்லியன் டாலர்கள் விமானங்கள் சீனா - 3,304 இந...

நாவித காதலனுக்கு தங்கையைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கும் ரவுடி அண்ணன்!

படம்
                    விய்யாலாவாரி கய்யாலு உதய் கிரண், நேகா ஜூல்கார ஶ்ரீஹரி நகரத்தில் படிக்கும் இளம்பெண்ணான நாயகி, நாயனை காதலிக்கிறாள். ஆனால் திருமணம் தனது ரவுடி அண்ணனின் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என விரும்புகிறாள். இதற்காக நாயகன், அவளது அண்ணனை சந்திக்க செல்கிறான். அவனால், திருமணத்திற்கான சம்மதத்தைப் பெற முடிந்ததா இல்லையா என்பதே கதை. பொதுவாக, தெலுங்குப்படங்களில் நிலப்பிரப்புத்துவ இயல்பை, ஆண்டான் அடிமை சமாச்சாரங்களை விசுவாசம், நேர்மையுடன் தொடர்புபடுத்தி பெருமையாக கூறுவார்களே ஒழிய, சாதி, வர்ணாசிரமம், சனாதன படிநிலையின் கொடூரங்களைக் காட்ட மாட்டார்கள். காதல் படத்தில் இருந்தாலும் அதை பெற்றோருக்கு கூறி அவர்களை ஒப்புவித்து திருமணம் செய்வதற்கு பாடுபட்டு இரண்டரை மணிநேர படத்தை ஓட்டுவார்கள். டூ ஸ்டேட்ஸ் நாவலில் சேட்டன் பகத், இந்திய சமூகத்தில் ஆண், பெண்ணைக் காதலிப்பதோடு முடிந்துவிடாது. அவனை பெண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பெண்ணை, ஆண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பிறகுதான் திருமணம் நடைபெறும் என பகடியாக எழுதியிருப்பார். அதேதான் இங்கும் நடக்கிறது. அ...