இடுகைகள்

வெறுப்பு அரசியல் -இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பு அரசியல் பேச்சில் முந்துவது யார்? - இந்தியாஸ்பெண்ட் ஆய்வு

படம்
வெறுப்பு அரசியல் ஏன் ? இந்தியாவில் ஆட்சி , அதிகாரத்தைப் பெற இனவெறுப்பைத் தூண்டும் வகையில் பல்வேறு எம்பி , எம்எல்ஏக்கள் பேசிவருகின்றனர் . இதில் பாஜக , தேர்தலில் பெறும் வெற்றியைப் போலவே 47% சதவிகிதம் பெற்று முன்னிலை வகிக்கிறது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது . பாஜகவைத் தொடர்ந்து அனைத்திந்திய மஜ்லிஸ் இட்டெஹடுல் முஸ்லிமீன் (AIMIM), தெலுங்கானா ராஷ்டிர சமிதி உட்பட ஆறுகட்சிகள் வெறுப்பு சொற்பொழிவுகளில் முன்னிலை வகிக்கின்றன . இதில் உத்தரப்பிரதேசம் , தெலுங்கானா , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெறுப்பு பேச்சுகள் அதிகம் பேசப்பட்டுள்ளன . பாஜக , சிவசேனா , பாமக , ஏஐயுடிஎஃப் , டிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பதினைந்து உறுப்பினர்கள் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் பத்து பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் . 43 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக 198 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .