தங்கவேட்டை கொள்ளையர்கள்!
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி ஒரு நாட்டிலுள்ள தங்க இருப்பிற்கு ஏற்ப இன்று பணம் அச்சடிக்கப்படுகிறது . வியாபாரத்தில் தங்கத்தை பரிமாற்றம் செய்வதை ஊக்குவித்த நாடு பிரிட்டன்தான் . இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட தங்க நாணயங்களே பெருமளவு உதவின . தங்கத்தை கள்ள நாணயமாக பயன்படுத்தும் போக்கும் உருவாகி வளர்ந்தது . மாசிடோனியாவைச் சேர்ந்த பணக்கார யூதர் ஜோஸ் பெராகா . 1941 ஆம் ஆண்டு ஜெர்மன் படை யூகோஸ்லேவியா நாட்டை ஆக்கிரமித்தபோது , ஜோஸ் பெராகவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் . அப்போது பெராகவும் மிகச்சில உறவினர்களும் அல்பேனியாவுக்கு படகு வழியாக தப்பிச்சென்றனர் . உதவியது , தங்க நாணயங்கள்தான் . இத்தாலி மொழியைக் கற்ற பெராகா , தன் உறவினர்கள் மூலம் வியாபாரம் செய்யத் தொடங்கினார் . ஆனால் கரன்சி நோட்டுக்களின் மீதான கிடுக்குப்பிடி சட்டங்களால் ஏற்றுமதி தொழில் நஷ்டமாகி அழிந்தது . பிரிட்டனின் தங்க நாணயத்தில் பயன்படும் தங்கத்தின் மதிப்பு 9 பவுண்டுதான் . ஆனால்